மதுரையில் தாயை வீட்டை விட்டு துரத்திய மகன்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு
மதுரை: மதுரையில் தாயை வீட்டை விட்டு துரத்திய மகன்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். கணவரை இழந்த 75 வயதான மூதாட்டி வீட்டை விற்று இரு மகன்களுக்கும் பணத்தை பிரித்து கொடுத்துள்ளார். தற்போது வயது மூப்பால் வீட்டிலிருந்து விரட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.