வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்கவுள்ள காங்., நட்சத்திர அரசியல் தலைவர்கள்..!

தினமலர்  தினமலர்
வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்கவுள்ள காங்., நட்சத்திர அரசியல் தலைவர்கள்..!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


லக்னோ: ஏழு மாநிலத் தேர்தலை முன்னிட்டு வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்கவுள்ளனர் காங்., நட்சத்திர அரசியல் தலைவர்கள்.


ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாதல், காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல், பிரியங்கா, குலாம் நபி ஆசாத், ஆர்பிஎம் சிங், முன்னாள் ஜேஎன்யு பல்கலை., மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமார், ஜி-23 மாநாட்டு தலைவர்களில் ஒருவரான பூபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்ட 30 காங்., நட்சத்திர அரசியல் தலைவர்கள் தற்போது உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநில தேர்தல்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க இம்முறை காங்கிரஸ் முக்கிய தலைவர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. மேலும் ஒமைக்ரான் கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடித்து சிறிய கூட்டங்களிலும் இவர்கள் கலந்துகொள்ள வியூகம் வகுத்துள்ளது.

இதிலிருந்து ஏழு மாநிலங்களிலும் பெரும்பான்மை பெற்று வெற்றியடைய காங்கிரஸ் அதி தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது தெளிவாகிறது. வரும் பிப்ரவரி 10ஆம் தேதி துவங்கி உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்ற காங்கிரஸ் இந்தப் பிரச்சார உத்தியை பயன்படுத்துகிறது.

கடந்தமுறை யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ., அரசு 312 இடங்களை கைப்பற்றிய நிலையில் சமாஜ்வாடி கட்சி 47 தொகுதிகளையும் பகுஜன் சமாஜ் 19 இடங்களை கைப்பற்றின.
அப்போது காங்கிரஸ் வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே வென்று படுதோல்வியைத் தழுவியது. தற்போது இதே போட்டி நிலவினாலும் கடந்த ஐந்தாண்டு யோகி அரசு ஆட்சியில் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், இதனால் காங்கிரஸ் இம்முறை கண்டிப்பாக வெல்லும் என்றும் அக்கட்சித் தலைமை நம்புவது குறிப்பிடத்தக்கது.

லக்னோ: ஏழு மாநிலத் தேர்தலை முன்னிட்டு வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்கவுள்ளனர் காங்., நட்சத்திர அரசியல் தலைவர்கள்.nsimg2944985nsimgராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை