குறைகிறது தினசரி பாதிப்பு; பலி எண்ணிக்கை அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
குறைகிறது தினசரி பாதிப்பு; பலி எண்ணிக்கை அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி : நம் நாட்டில் கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. ஆனாலும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அடைய வைத்துள்ளது.

21 பேருக்கு பாதிப்பு

நம் நாட்டில் ஒமைக்ரான் வைரசின் மற்றொரு பிரிவான பி.ஏ., 2 வகை வைரசால் 21 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மத்திய பிரதேசத்தின் இந்துாரில் உள்ள ஒரு தனியார் ஆய்வகத்தில் கடந்த 18 நாட்களில் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில், 22 பேரின் மாதிரிகளில் இந்த புதிய வகை வைரஸ் இருப்பது தெரியவந்துஉள்ளது.

தவறான சிகிச்சை முறை மூத்த மருத்துவ ஆராய்ச்சியாளரான டாக்டர் ககன்தீப் காங் நேற்று கூறியதாவது:ஒமைக்ரான் வகை கொரோனா வைரசில் இருந்து குணமடைய, 'மோனோகுளோனல் ஆன்டிபாடி தெரபி' எனப்படும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிகிச்சை முறையை, டாக்டர்கள் பரிந்துரைத்து வருகின்றனர்.

அது நெறிமுறையற்ற, அறிவியல்பூர்வமற்ற சிகிச்சை முறை. டாக்டர்கள், வேறு சிறந்த சிகிச்சை முறையை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.தடுப்பூசி செலுத்தாதோருக்கு ஆபத்துஉலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப குழு தலைவர் மரியா வான் கெர்கோவ் நேற்று கூறியதாவது:ஒமைக்ரானால் பாதிக்கப்படுவோருக்கு அனைத்து விதமான பாதிப்புகளும் ஏற்படுகின்றன. அறிகுறிகள் இல்லாமல் பலர் பாதிக்கப்படுகின்றனர்; பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.வயது அதிகமானோர், வேறு நோய்களால் பாதிக்கப்பட்டோர், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் ஆகியோருக்கு, ஒமைக்ரான் வைரசால் மோசமான பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனாவுக்கு முடிவுஐரோப்பிய நாடுகளில், 'ஒமைக்ரான்' வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில்,உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய நாடுகளுக்கான இயக்குனர் ஹான்ஸ் குளூஜ் நேற்று கூறுகையில், “ஐரோப்பாவில் கொரோனா பரவலை, ஒமைக்ரான் வகை வைரஸ் ஒரு புதிய பரிமாணத்திற்கு நகர்த்திவிட்டது.

விரைவில், அங்கு கொரோனாவுக்கு முடிவு வர உள்ளது,” என்றார்.சரத் பவாருக்கு தொற்றுதேசியவாத காங்., கட்சித் தலைவர் சரத் பவார், 81, நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து டாக்டர்களின் பரிந்துரையை ஏற்று, அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதை அறிக்கை வெளியிட்டு உறுதிபடுத்திய சரத் பவார், தன்னை சமீபத்தில் சந்தித்த அனைவரையும், கொரோனா பரிசோதனைகளை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

புதுடில்லி : நம் நாட்டில் கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. ஆனாலும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அடைய வைத்துள்ளது. nsimg2944892nsimg கொரோனா மூன்றாவது அலை

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை