நைஜீரிய வாலிபர்கள் கைது

தினகரன்  தினகரன்
நைஜீரிய வாலிபர்கள் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை  புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்த போது, அவர்கள் நைஜீரியா நாட்டை  சேர்ந்த விக்டர் (32), ஓக்கிசூகியூ (27) என்பதும், பாஸ்போர்ட் இல்லாமல்  இந்தியாவிற்குள் வந்து சட்டவிரோதமாக தங்கி இருந்ததும், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் இருந்து பஸ்சில் பெருந்துறை வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார்  கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

மூலக்கதை