பிப்ரவரி 14ம் தேதி நடைபெற இருந்த பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
பிப்ரவரி 14ம் தேதி நடைபெற இருந்த பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: பிப்ரவரி 14ம் தேதி நடைபெற இருந்த பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 20ம் தேதிக்கு ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் அடுத்த மாதம் 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரையில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது. உபி.யில் 7 கட்டங்களாகவும், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவாவில் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாகவும், மணிப்பூரில் 2 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. பஞ்சாப்பில் பிப்ரவரி 16ம் தேதி குரு ரவிதாஸ் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு தேர்தலை குறைந்தப்பட்சம் 6 நாட்களாவது ஒத்திவைக்கும்படி அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியும் ( காங்கிரஸ்), பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் நேற்று முன்தினம் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தனர். பாஜ.வும் அதன் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளமும் (சம்யுக்த் பிரிவு) நேற்று இதே கோரிக்கை வலியுறுத்தின. இந்நிலையில் பிப்ரவரி 14ம் தேதி நடைபெற இருந்த பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 20ம் தேதிக்கு ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மூலக்கதை