வெளியேறினார் ஜோகோவிச்

தினகரன்  தினகரன்
வெளியேறினார் ஜோகோவிச்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் தனது விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார். ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் இன்று தொடங்கும் நிலையில், நடப்பு சாம்பியனான ஜோகோவிச் பங்கேற்க முடியாதது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அவர் தொடர்ந்து தயக்கம் காட்டி வருவதால், அடுத்து வரும் தொடர்களில் பங்கேற்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

மூலக்கதை