இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2.6 லட்சத்தை நெருங்கியது; தற்போது சிகிச்சையில் 14.17 லட்சம் பேர்: சுகாதாரத்துறை அறிவிப்பு

தினகரன்  தினகரன்
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2.6 லட்சத்தை நெருங்கியது; தற்போது சிகிச்சையில் 14.17 லட்சம் பேர்: சுகாதாரத்துறை அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2.6 லட்சத்தை நெருங்கியது. நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.85 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.68 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,68,833 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,63,50,962 ஆக உயர்ந்தது.* புதிதாக 402 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,85,752 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,22,684 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,49,47,390 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14,17,820 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* குணமடைந்தோர் விகிதம் 95.20% ஆக குறைந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.33% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 3.48% ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் 1,56,02,51,117 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 58,02,976 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை