இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': நகருக்குள் புகுந்த ஒற்றை யானை

தினமலர்  தினமலர்
இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்: நகருக்குள் புகுந்த ஒற்றை யானை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பைபாஸ் ரோட்டில் கார்கள் மோதல்



அவிநாசி;அவிநாசி அருகே பைபாஸ் ரோட்டில், இரு கார்கள் மோதி கொண்டன.கோவை -- சேலம் பைபாஸ் ரோட்டில், சேலத்தில் இருந்து கோவை நோக்கி கார், (டி.என்.07, சிஏ., 8879), சென்று கொண்டிருந்தது. அதிவேகமாக வந்த இந்த கார் தெக்கலுார் போலீஸ் செக்போஸ்ட் அருகே வந்த போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், கட்டுப்பாடிழந்து, ரோட்டில் போடப்பட்ட மையத்தடுப்பில் மோதி, மறுபுறம் ரோட்டுக்கு வந்தது.அதே நேரம், கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது. இதில், இரு கார்களும் பலத்த சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

திருமணமான ஒரே ஆண்டில் இளம் பெண் தற்கொலை

பொங்கலுார்:திருமணமான ஒரே ஆண்டில், இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து, ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.பொங்கலுார் அம்மன் நகரைச் சேர்ந்தவர் பாண்டி,25; இவரது மனைவி ரஞ்சிதா,21. திருமணமாகி ஓராண்டு ஆகிறது. பாண்டி ரஞ்சிதா மீது சந்தேகப்பட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.மனமுடைந்த ரஞ்சிதா சேலையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருமணமான ஒரே ஆண்டில், இளம்பெண் இறந்ததால் ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது.

தீக்குளித்து ஒருவர் தற்கொலை

பல்லடம்:பல்லடம் அருகே ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.பல்லடம், மங்கலம் ரோடு, சி.எம்., நகரை சேர்ந்த சக்திவேல் மகன் குமார், 48. மனைவி முருகம்மாள், 45, மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசிக்கிறார். கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின், சர்க்கரை நோய் காரணமாக இவரது ஒரு கால் அறுவை சிகிச்சையில் எடுக்கப்பட்டது.இதனால் மன வருத்தத்தில் இருந்த குமார், நேற்று முன்தினம், பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். 75 சதவீத காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

நண்பர் இறந்த துக்கம்: வாலிபர் தற்கொலை

ராமநாதபுரம் :நண்பர் இறந்த துக்கத்தில் வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.ராமநாதபுரம் வனசங்கரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஞானசேகரன் மகன்கள் மருதுபாண்டி 25, மணிகண்டன் 24. தந்தை இறந்த நிலையில் தனியாக வசித்தனர். சில நாட்களுக்கு முன் மருதுபாண்டியனின்நண்பன் தர்ஷன் விபத்தில் இறந்தார். அப்போதே மன உளைச்சலில் இருந்தார். சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்வதாக கடிதம் எழுதி வைத்தார்.இதனை பார்த்த தம்பி மணிகண்டன் கண்டித்தார். மருதுபாண்டியன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.ராமநாதபுரம் பஜார் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் விசாரிக்கிறார்.

நகருக்குள் புகுந்த ஒற்றை யானை

வால்பாறை:வால்பாறை நகருக்குள் புகுந்த ஒற்றை யானை, வாழைகளை ருசித்து உட்கொண்டது.வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. குறிப்பாக, கருமலை பாலாஜி கோவில், வறட்டுப்பாறை, வில்லோனி கவர்க்கல் அய்யர்பாடி எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.இந்நிலையில், வால்பாறை நகர் கோ - ஆப்ரேடிவ் காலனி குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு, 1:30 மணிக்கு ஒற்றை யானை புகுந்தது. அங்குள்ள ஒரு வீட்டின் பின்பக்கம் இருந்த தடுப்பு சுவரை இடித்து, பயிரிடப்பட்டிருந்த வாழைகளை உட்கொண்டது.தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று, அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். எஸ்டேட் பகுதியில் மட்டுமே முகாமிடும் யானைகள் தற்போது வால்பாறை நகருக்குள்ளும் வரத்துவங்கியுள்ளதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

உடுமலை:உடுமலையில், வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்தனர்.உடுமலை அருகேயுள்ள கண்ணம நாயக்கனுார் பள்ளிவலசைச்சேர்ந்தவர் மாரியப்பன்,55. அவர், வீட்டில் கஞ்சா செடிகள் சாகுபடி செய்து வளர்த்து வந்ததை போலீசார் கண்டறிந்து, பறிமுதல் செய்தனர்.மேலும், விற்பனைக்காக வைத்திருந்த, 150 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து, மாரியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பைபாஸ் ரோட்டில் கார்கள் மோதல்அவிநாசி;அவிநாசி அருகே பைபாஸ் ரோட்டில், இரு கார்கள் மோதி கொண்டன.கோவை -- சேலம் பைபாஸ் ரோட்டில், சேலத்தில் இருந்து கோவை நோக்கி கார், (டி.என்.07, சிஏ., 8879),

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை