ஜன. 31ல் கூடுகிறது பட்ஜெட் கூட்டத் தொடர்...

தினமலர்  தினமலர்
ஜன. 31ல் கூடுகிறது பட்ஜெட் கூட்டத் தொடர்...

புதுடில்லி :பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன. 31ல் துவங்கி ஏப்., 8 வரை இரு கட்டங்களாக நடக்கிறது. பிப்., 1ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் உச்சபட்ச பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி கூட்டத் தொடர் நடத்தப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று



பரவத் துவங்கிய பின் 2020ல் நடந்த பார்லி., மழைக்கால கூட்டத் தொடர் தொற்று தடுப்பு நெறிமுறைகளுடன் நடத்தப்பட்டது.காலையில் துவங்கி மதியம் வரை ராஜ்யசபாவும், மதியம் துவங்கி மாலை வரை லோக்சபா கூட்டமும் நடந்தன. 2021 பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல்கட்ட கூட்டமும் இதே நடைமுறையை பின்பற்றி நடந்தது.
இரண்டாவது கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர், மழைக் காலம், குளிர் கால கூட்டத் தொடர்கள் ஆகியவற்றில் பழைய நடைமுறை பின்பற்றப்பட்டன. ஆனால் உறுப்பினர்கள் போதிய இடைவெளியுடன் அமர்ந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்நிலையில் 2022 - 23ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து பார்லி., விவகாரத்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதன் விபரம்:பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன.31ல் ஜனாதிபதி உரையுடன் துவங்குகிறது. பிப்., 1ம் தேதி 2022 - 23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அன்றில் இருந்து பிப்., 11 வரை முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கிறது.
ஒரு மாத இடைவெளிக்கு பின் மார்ச் 14ல் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கூடுகிறது. இது ஏப்., 8ம் தேதி நிறைவடைகிறது. பார்லி., குழுக்கள் தங்கள் துறை சார்ந்த நிதி ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்ய இந்த ஒரு மாத இடைவெளி வசதியாக இருக்கும். ஹோலி
பண்டிகையை முன்னிட்டு மார்ச் 18ல் கூட்டம் நடக்காது.இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரின் போது உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தில் இருக்கும். இரண்டாம் கட்ட கூட்டம் கூடும் போது தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கும்.'ஒமைக்ரான்' வகை கொரோனா பரவல் காரணமாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள், தொற்று இல்லை
என்று சான்று வைத்துள்ளவர்கள் மட்டுமே பார்லி., வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு சபைகளும் ஒரே நேரத்தில் கூடுமா அல்லது 'ஷிப்ட்' அடிப்படையில் கூட்டப்படுமா என்பது குறித்து இன்னும் முடிவு அறிவிக்கப்படவில்லை.
இம்மாத துவக்கத்தில் பார்லி., ஊழியர்கள் 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பார்லி., வளாகத்தை சமீபத்தில் பார்வையிட்டார்.கூட்டத்தில் பங்கேற்கும் 60 வயதுக்கு மேற்பட்ட எம்.பி.,க்களின் உடல்நலன் குறித்து சிறப்பு கவனம் செலுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.


எகிறும் எதிர்பார்ப்புகள்



கொரோனா தொற்று பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதை அடுத்து மத்திய பட்ஜெட் மீதான மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கொரோனா நிவாரண நிதி வழங்குவது, வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு அதிகரிப்பு உள்ளிட்டவை நடுத்தர வர்க்க மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளன. கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது, உற்பத்தி சார்ந்த
ஊக்கத் தொகையை அதிகரித்து உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு வழி செய்வது, உள்கட்டமைப்பு மற்றும் வீட்டு வசதி துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்குவது உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

புதுடில்லி :பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன. 31ல் துவங்கி ஏப்., 8 வரை இரு கட்டங்களாக நடக்கிறது. பிப்., 1ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை