நாகாலாந்தில் கிராமத்தினர் கொல்லப்பட்ட சம்பவம்: வேதனை தெரிவித்தது ராணுவம்

தினமலர்  தினமலர்
நாகாலாந்தில் கிராமத்தினர் கொல்லப்பட்ட சம்பவம்: வேதனை தெரிவித்தது ராணுவம்

கொஹிமா: மியான்மர் எல்லையோரம் அமைந்துள்ள நாகாலாந்தின் மோன் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த உளவுத்துறை தகவலின் பேரில் சென்ற ராணுவத்தினர், பொதுமக்களில் 13 பேரை தவறுதலாக சுட்டுக்கொன்றனர். இச்சம்பவத்திற்கு மாநில முதல்வர், ராணுவம், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் அரசுக்கு எதிராக பல்வேறு பிரிவினைவாத குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இன்று (டிச.,5) அதிகாலை மியான்மர் நாட்டின் எல்லையை ஒட்டிய மோன் மாவட்டத்தின் ஒடிங் கிராமத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற ராணுவத்தினர் கிராமத்தினரை பயங்கரவாதிகள் என நினைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் 13 பேர் உயிரிழந்தனர்.


ஒரு பாதுகாப்பு வீரர் உயிரிழப்பு


தகவலறிந்து ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் ஒன்று திரண்டு பாதுகாப்பு படையினரை தாக்கியுள்ளனர். அவர்களின் மூன்று வாகனங்களை தீவைத்து கொளுத்தியுள்ளனர். கிராமத்தினரின் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் பலர் காயமடைந்தனர். ஒரு வீரர் உயிரிழந்தார். தங்களை தற்காத்துக் கொள்ள அவர்கள் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் மேலும் 7 கிராமத்தினர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தால் நாகலாந்து மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.

நாகாலாந்து முதல்வர் ரியோ இச்சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓடிங்கில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமான துரதிர்ஷ்டவசமான சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இச்சம்பவம் குறித்து உயர்மட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்து சட்டத்தின்படி நீதி வழங்கும். அனைவரும் அமைதியாக இருக்கும் படி வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார். ராணுவமும் நடந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாகாலாந்தின் ஓட்டிங்கில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட சிறப்பு விசாரணைக் குழு இந்த சம்பவத்தை முழுமையாக விசாரித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியை உறுதி செய்யும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த சம்பவம் மனதை பதற வைக்கிறது. மத்திய அரசு உண்மையான பதிலை அளிக்க வேண்டும். சாமானிய மக்கள் அல்லது பாதுகாப்பு படையினர் சொந்த நிலத்தில் பாதுகாப்பாக இல்லாத போது, மத்திய உள்துறை அமைச்சகம் சரியாக என்ன செய்து கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

கொஹிமா: மியான்மர் எல்லையோரம் அமைந்துள்ள நாகாலாந்தின் மோன் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த உளவுத்துறை தகவலின் பேரில் சென்ற ராணுவத்தினர்,

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை