இலங்கை நபர் கொலையில் நடவடிக்கை: இம்ரான்

தினமலர்  தினமலர்
இலங்கை நபர் கொலையில் நடவடிக்கை: இம்ரான்

கொழும்பு,-''இலங்கையைச் சேர்ந்தவர் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என. இலங்கை அதிபரிடம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உறுதியளித்துள்ளார்.

நம் அண்டை நாடான இலங்கையைச் சேர்ந்தவர் பிரியந்தா குமாரா. இவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம், சியால்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பொது மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவர் அங்குள்ள தெஹ்ரீக் - இ - லபைக் என்ற மத அமைப்பின் மத பிரசார சுவரொட்டியை கிழித்து குப்பை தொட்டியில் வீசிய தாக வதந்தி பரவியது.

இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு பிரியந்தா குமாராவை தொழிற்சாலையில் இருந்து வெளியே இழுத்து வந்து, அடித்து உதைத்து தீ வைத்து எரித்துக் கொன்றனர். இந்த சம்பவம் இலங்கை அரசை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொலை செய்யப்பட்ட பிரியந்தா குமாராவின் மனைவி மற்றும் குழந்தைகள் கொழும்பில் வசிக்கின்றனர். வன்முறை கும்பல்பிரியந்தா குமாராவின் வீட்டுக்கு இலங்கை அமைச்சர்கள் பிரசன்னா ரனதுங்கா, நமல் ராஜபக்சே ஆகியோர் நேற்று நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அவர்களிடம் பிரியந்தா குமாராவின் மனைவி கூறுகையில், ''என் கணவர் அப்பாவி. அவர் எந்த தவறும் செய்யவில்லை. பாகிஸ்தான் வன்முறை கும்பலுக்கு அவர் பலியாகி விட்டார்.''இந்த விவகாரத்தில் எனக்கு நியாயம் கிடைக்க இலங்கை, பாகிஸ்தான் அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.இதற்கிடையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார்.

113 பேர் கைது

பாகிஸ்தானில் பிரியந்தா குமாரா எரித்துக் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்த இம்ரான், ''இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உறுதிஅளித்தார். பிரியந்தா குமாரா கொலை தொடர்பாக இதுவரை, ௧௧௩ பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் இம்ரான் கான் தெரிவித்தார்.

சுக்கு நுாறாக உடைந்த எலும்புகள்பாகிஸ்தானில் வன்முறை கும்பலால் அடித்து, எரித்துக் கொல்லப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பிரியந்தா குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:பிரியந்தா குமாரின் அனைத்து எலும்புகளும் சுக்கு நுாறாக உடைந்துள்ளன. அவரது உடல் ௯௯ சதவீதம் எரிந்துவிட்டது. வன்முறையாளர்கள் அடித்து சித்ரவதை செய்தபோதே, அவர் இறந்துவிட்டார். இறந்த உடலை தான் வன்முறையாளர்கள் எரித்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையில் பிரியந்தா குமாரின் மீதியுள்ள உடல் பகுதிகள் இலங்கை துாதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பிரியந்தா குமாரின் உடல் இலங்கைக்கு இன்று தனி விமானத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது.

கொழும்பு,-''இலங்கையைச் சேர்ந்தவர் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என. இலங்கை அதிபரிடம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உறுதியளித்துள்ளார்.

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை