சென்னையில் கொரோனா அதிகரிப்பு : தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்

தினமலர்  தினமலர்
சென்னையில் கொரோனா அதிகரிப்பு : தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்

புதுடில்லி : தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

தமிழகத்தில் சென்னை, வேலுார், திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளதாக, மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.

கவலையளிக்கிறது



மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:தமிழகம், கர்நாடகா, ஒடிசா, கேரளா, மிசோரம் ஆகிய மாநிலங்களிலும், ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது.
கர்நாடகாவில் பெங்க ளூரு, மைசூரூ, தர்வாத் ஆகிய பகுதிகளில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, வேலுார், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கடந்த வாரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த ௩ம் தேதியுடன் முடிந்த ஒரு மாதத்தில் மட்டும் ௨௩ ஆயிரத்து ௭௬௪ பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் கேரளாவில் தான் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. டிசம்பர் ௩ம் தேதியுடன் முடிந்த ஒரு மாதத்தில் நாடு முழுதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் ௫௫ சதவீதத்துக்கும் அதிகமானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

ஆபத்தாகி விடும்



ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடந்த ஒரு மாதத்தில் ௪,௮௬௨ பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.ஒடிசாவில் கடந்த வாரத்தில் ஆறு மாவட்டங்களில் தொற்று பரவல் சற்று அதிகரித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரமின் அய்ஸ்வால் மாவட்டத்தில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் முற்றிலும் குறைந்துவிடவில்லை. இப்போது உருமாறிய 'ஒமைக்ரான்' கொரோனா வைரஸ் பரவல் மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
எனவே தொற்று பரவலை தடுப்பதில் சிறிய அலட்சியம் காட்டப்பட்டாலும், அது ஆபத்தாகி விடும்.தொற்று தடுப்பு நடவடிக்கைகளையும், பரிசோதனைகளையும் தீவிரப்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையங்களிலேயே பரிசோதிக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

புதுடில்லி : தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை