அ.தி.மு.க., தலைமை பதவிக்கான தேர்தல் பன்னீர்செல்வம், பழனிசாமி மனு தாக்கல்

தினமலர்  தினமலர்
அ.தி.மு.க., தலைமை பதவிக்கான தேர்தல் பன்னீர்செல்வம், பழனிசாமி மனு தாக்கல்

சென்னை :அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு, முன்னாள் முதல்வர்கள் பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் பொதுச்செயலர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

ஒருங்கிணைப்பாளராக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முன்னாள் முதல்வர் பழனிசாமியும் உள்ளனர்.ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யும் நடைமுறை இருந்தது.
இம்மாதம் 1ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில், இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள், ஒற்றை ஓட்டின் வாயிலாக இணைந்தே தேர்வு செய்யும் வகையில், சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.மறுநாள், கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. மனு தாக்கல் நேற்று முன்தினம் துவங்கியது.
நேற்று காலை 10:50க்கு பன்னீர்செல்வமும், பழனிசாமியும் கட்சி தலைமை அலுவலகம் வந்தனர்.

அவர்களை ஆரத்தி எடுத்து தொண்டர்கள் வரவேற்றனர். இருவரும் எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா சிலையை தொட்டு வணங்கி விட்டு அலுவலகம் உள்ளே சென்றனர்.காலை 11:20க்கு இருவரும், தேர்தல் ஆணையர்களான முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயராமன் ஆகியோரிடம் வேட்பு மனுவை சமர்பித்தனர். வேட்பு மனு தாக்கல் முடிந்ததும், முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் வரிசையில் நின்று, இருவருக்கும் பொன்னாடை, பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். சிலர் அவர்களின் கால்களை தொட்டு வணங்கினர்.
வேட்பு மனு கட்டணமாக, 25 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் பெயரில், கட்சி நிர்வாகிகள் பணம் செலுத்தினர். நேற்று மாலை 3:00 மணிக்கு மனு தாக்கல் நிறைவடைந்தது. மொத்தம் 154 மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.
இன்று காலை 11:25 மணிக்கு மனுக்கள் பரிசீலனை நடக்கிறது.

வேட்பு மனுவை வாபஸ் பெற விரும்புவோர், நாளை மாலை 4:00 மணிக்குள் வாபஸ் பெற வேண்டும். பெயரளவில் மனுத் தாக்கல் செய்த சிலர், மனுக்களை வாபஸ் பெறுவர் என்று கூறப்படுகிறது.போட்டியில்லை என்றால், அப்போதே ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவர்.

இதுகுறித்து, தேர்தல் ஆணையர்களாக செயல்படும், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயராமன் ஆகியோர் கூறியதாவது:அ.தி.மு.க., விதிகள் அடிப்படையில் தேர்தல் நடக்கிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. எத்தனை மனுக்கள் என்ற விபரம், பரிசீலனை முடிந்த பின் தெரிவிக்கப்படும்.
வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்கள் தாக்கப்பட்டதாக கூறுவது தவறான தகவல். கட்சி சட்ட விதிகளின்படி, மனுக்கள் பரிசீலனை செய்யப்படும்; புகார் எதுவும் வரவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாதுகாப்பு தாங்க: கமிஷனரிடம் புகார்!



அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் புகுந்து, குழப்பம் ஏற்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதோடு, உரிய பாதுகாப்பு அளிக்கக்கோரி, அ.தி.மு.க., சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், உட்கட்சி தேர்தல் ஜனநாயக முறையில், அமைதியாக நடந்து வருகிறது. ஆனால், கட்சிக்கு தொடர்பில்லாத சிலர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், கட்சியில் அடிப்படை உறுப்பினராக இல்லாதவர்கள், சமூக விரோதிகள் துணையோடு குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றனர்.
அவர்கள் குழப்பம் ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வருகின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும்; பாதுகாப்பு வழங்க வேண்டும் என கமிஷனரிடம், புகார் மனு அளித்துள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை :அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு, முன்னாள் முதல்வர்கள் பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.ஜெயலலிதா மறைவுக்கு

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை