பாக்.,கில் அதிகாரி எரித்து கொலை இலங்கை பார்லிமென்ட் கண்டனம்

தினமலர்  தினமலர்
பாக்.,கில் அதிகாரி எரித்து கொலை இலங்கை பார்லிமென்ட் கண்டனம்

கொழும்பு:நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இலங்கையைச் சேர்ந்த அதிகாரி உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்டதை கண்டித்து இலங்கை பார்லி.,யில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையைச் சேர்ந்த பிரியந்தா குமாரா தியாவதனா, 40, பாக்.,கில் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பொது மேலாளராக பணியாற்றி வந்தார். இவர், தன் அலுவலக சுவர் அருகே அனுமதியின்றி ஒட்டப்பட்ட தெஹ்ரீக் - இ - லபைக் அமைப்பின் மத பிரசார சுவரொட்டியை கிழித்துப் போட்டார்.
இது தெரியவந்ததை அடுத்து, அந்த அமைப்பினர் பிரியந்தாவை அடித்து உதைத்து, உயிரோடு தீ வைத்து எரித்துக் கொன்றனர். இது தொடர்பாக 100 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில் பிரியந்தா கொல்லப்பட்டதை கண்டித்து இலங்கை பார்லி.,யில் அனைத்து கட்சி எம்.பி.,க்கள் ஆதரவுடன் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் பாகிஸ்தானில் வசிக்கும் இலங்கை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக பேச்சு நடத்த வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரியந்தா கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாக்., பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்திருப்பதை வரவேற்பதாக, இலங்கை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே பார்லி.,யில் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு அவமானம்பாக்., பிரதமர் இம்ரான் கான், இலங்கையைச் சேர்ந்த பிரியந்தா கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இலங்கையைச் சேர்ந்த பிரியந்தா உயிரோடு எரித்து கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இது, பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள். இந்த சம்பவம் தொடர்பான புலனாய்வு விபரங்களை ஆய்வு செய்து வருகிறேன். தவறு செய்தோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர். இந்த சம்பவத்தில் தொடர்புள்ள சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

கொழும்பு:நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இலங்கையைச் சேர்ந்த அதிகாரி உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்டதை கண்டித்து இலங்கை பார்லி.,யில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இலங்கையைச் சேர்ந்த

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை