தென் ஆப்ரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
தென் ஆப்ரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அதிகரிப்பு

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளது. குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் தென் ஆப்ரிக்காவில் 16 ஆயிரத்து 55 பேர் பாதிக்கப்பட்டனர், 25 பேர் உயிரிழந்தனர். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டார்களா? அல்லது ஒமைக்ரானால் உயிரிழந்தார்களா? என்பது உறுதியாகவில்லை.

ஆனால், கடந்த காலத்தில் டெல்டா வைரஸால் அதிகமான அளவு மருத்துவமனையில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் மூன்றாவது அலையில் 5 வயதுக்குட்டபட்ட குழந்தைகள், 15 வயது முதல் 19 வயதுள்ளவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். அந்த அளவுக்கு குழந்தைகள் பாதிக்கப்படவில்லை என்றாலும், அதிகமான பாதிப்பு குழந்தைகளுக்கு இருக்கிறது.

தென் ஆப்ரிக்க சுகதாார துறை அமைச்சகத்தின் பரவக்கூடிய நோய்களுக்கான தேசிய ஆய்வு மையத்தின் மருத்துவர் வாசிலா ஜாஸட் கூறியதாவது: தென் ஆப்ரிக்காவில் நான்காவது கொரோனா அலை துவங்கியுள்ளது. அனைத்து வயதுப் பிரிவினரும் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. ஆனால், குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடுத்ததாக இரண்டாவது அதிக பாதிப்பு குழந்தைகளுக்கு தான் இருக்கிறது.

கடந்த காலங்களில் நாங்கள் பார்த்ததைவிட இப்போது வித்தியாசமாக இருக்கிறது. தென் ஆப்ரிக்காவின் 9 மாகாணங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மருத்துமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பரவக்கூடிய நோய்களுக்கான தேசிய ஆய்வு மையத்தின் மருத்துவர் மைக்கேல் க்ரூம் கூறியதாவது: குழந்தைகளுக்கு திடீரென தொற்று அதிகரித்துள்ளது குறித்து தீவிரமான ஆய்வு தேவை. நான்காவது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம். இதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் எந்த பிரிவினர் பாதிக்கப்படுவார்கள் என்பது வரும் வாரங்களில் தெரியும். குழந்தைகளுக்கான படுக்கைகள், செவிலியர்கள், மருந்துகள், ஐ.சி.யு.,க்கள் ஆகியவற்றை தயார் செய்வது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளது. குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.கடந்த 24

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை