ஒமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபட்டால் தென்ஆப்பிரிக்கா 4வது அலையால் பாதிப்பு: சுகாதார துறை அமைச்சர் ஜோ பாஹ்லா

தினகரன்  தினகரன்
ஒமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபட்டால் தென்ஆப்பிரிக்கா 4வது அலையால் பாதிப்பு: சுகாதார துறை அமைச்சர் ஜோ பாஹ்லா

தென்ஆப்பிரிக்கா: ஒமிக்ரான் கொரோனா வைரஸ் மாறுபட்டால் தென்ஆப்பிரிக்கா 4வது அலையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் சுகாதார துறை அமைச்சர் ஜோ பாஹ்லா தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள 9 மாகாணங்களில் 7-ல் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பல உயிரிழப்புகளை ஏற்படுத்தாமல் ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று நம்புவதாகவும் அமைச்சர் ஜோ பாஹ்லா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்கர்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்திய அவர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்காமலேயே 4வது அலையை நிர்வகிக்க முடியும் என்றும் கூறினார். உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் உருமாற்றம் பெற்ற ஒமிக்ரான் கொரோனா வைரஸ் கடந்த மாதம் தென்ஆப்பிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது.

மூலக்கதை