தேவாலய தாக்குதல் : இலங்கை அதிபர் குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்
தேவாலய தாக்குதல் : இலங்கை அதிபர் குற்றச்சாட்டு

கொழும்பு : ''இலங்கை தேவாலய தாக்குதல் குறித்து உளவுத் துறை எச்சரித்தும், முந்தைய அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறி விட்டது,'' என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த 2019 ஈஸ்டர் தினத்தன்று நம் அண்டை நாடான இலங்கையில் மூன்று தேவாலயங்கள் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 270 பேர் பலியாயினர்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.அப்போது இலங்கை அதிபராக இருந்த சிறிசேன, தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டார். இதையடுத்து உளவுத் துறை எச்சரித்தும், இலங்கை அதிபர், ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோர் தாக்குதலை தடுக்கத் தவறியதாக விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் செய்தது.

இது குறித்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியதாவது:
தேவாலயத் தாக்குதலை முந்தைய அரசு தடுக்கத் தவறி விட்டது. அவர்கள் தேசப் பாதுகாப்பை பாழ்படுத்தி விட்டனர். முன்னாள் அதிபர், பிரதமர், அமைச்சர்கள் என அனைவரையும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பாளி ஆக்க வேண்டும் என விசாரணைக் குழு அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேவாலயத் தாக்குதல்களை தடுக்கத் தவறியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசுக்கு சிலர் நெருக்கடி கொடுக்கின்றனர்.அதை நான் ஏற்கத் தயார். பார்லி.,யை கூட்டி சம்பந்தப்பட்டவர்களின் சிவில் உரிமையை பறிக்க நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் தற்போது இப்பிரச்னை நீதிமன்றத்தில் உள்ளதால், அதில் தலையிட அரசு விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கொழும்பு : ''இலங்கை தேவாலய தாக்குதல் குறித்து உளவுத் துறை எச்சரித்தும், முந்தைய அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறி விட்டது,'' என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை