‘டேகா இண்டஸ்ட்ரீஸ்’ ஐ.பி.ஓ., டிசம்பர் 1ல் துவங்குகிறது

தினமலர்  தினமலர்
‘டேகா இண்டஸ்ட்ரீஸ்’ ஐ.பி.ஓ., டிசம்பர் 1ல் துவங்குகிறது

புதுடில்லி:சுரங்கத் தொழிலுக்கு தேவைப்படும் நுகர்பொருட்கள் தயாரித்து வழங்கி வரும் நிறுவனமான ‘டேகா இண்டஸ்ட்ரீஸ்’ டிசம்பர் முதல் தேதியன்று ஐ.பி.ஓ., எனும் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்நிறுவன பங்கு வெளியீடு, டிசம்பர் முதல் தேதியன்று துவங்கி, 3ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.இந்த பங்கு வெளியீட்டின் போது, முழுக்க முழுக்க நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களின் 1.37 கோடி பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன.
புதிய பங்குகள் எதுவும் விற்பனைக்கு விடுக்கப்படவில்லை.தற்போது, இந்நிறுவனத்தின் பங்குகளில் 85.17 சதவீதம் நிறுவனர்கள் வசமும்; 14.54 சதவீதம் பங்கு தாரரான வாக்னர் நிறுவனத்தின் வசமும் உள்ளது.கோல்கட்டாவைச் சேர்ந்த இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ‘ஆக்சிஸ் கேப்பிட்டல்’ மற்றும் ‘ஜே.எம்., பைனான்ஷியல்’ ஆகிய நிறுவனங்கள் நிர்வகித்து வருகின்றன.

இந்நிறுவன பங்குகள், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகியவற்றில் பட்டியலிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிறுவன பங்குகள் விலை எவ்வளவு என்பது குறித்து, விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை