உஷார்! சென்னையின் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழை நீரால், டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

தினமலர்  தினமலர்
உஷார்! சென்னையின் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழை நீரால், டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

சென்னையின் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழை நீரால், டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக மாநகராட்சி எச்சரித்துள்ளது.

டெங்கு காய்ச்சலை தடுக்கவும், தேங்கும் மழை நீரால் ஏற்படும் தொற்றுநோய் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்கவும், மலேரியா தடுப்பு பணியாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். குடிநீரின் தரம் கண்காணிக்கப்படுவதுடன், கொசு மருந்து, பிளீச்சிங் பவுடர் தெளித்தல், குளோரின் மாத்திரை வழங்குதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தற்போது மழைக்காலம் என்பதால், நன்னீரில் வளரும் டெங்கு கொசு உற்பத்தி அதிகரித்து, டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. தமிழகம் முழுதும், கடந்த ஆண்டு, 2,410 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் இதுவரை, 4,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சென்னையில் மட்டும், 800க்கும் மேல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. உடல் உபாதைகள்சென்னையில், அக்டோபர் மாதத்தில் மட்டும், 219 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். இதனால், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை, மாநகராட்சி சுகாதாரத் துறையின் முடுக்கி விட்டுள்ளனர். அதன் படி, மலேரியா தடுப்பு பணியாளர்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று, மக்கள் மத்தியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கடந்த மாத இறுதியில் துவங்கிய பருவ மழையால், மாநகரில், 1,200க்கும் மேற்பட்ட தெருக்களில் மழை நீர் தேங்கியது. பல இடங்களில் தேங்கிய மழை நீர் வடிய, ஒருவாரத்துக்கு மேல் ஆனது. இதனால், டெங்கு தடுப்பு பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. மழை நீர் தேங்கிய பகுதிகளில் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் அதிகரித்து உள்ளன.இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெற வசியாக, மாநகராட்சி சார்பில், 500க்கும் மேற்பட்ட இடங்களில், மழைக்கால மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 1,000க்கும் மேற்பட்டோருக்கு, உடல் உபாதைகள் குறித்த பரிசோதனை நடத்தப்படுவதுடன், மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னையில், கடந்த மாதத்தை ஒப்பிடுகையில், நவ., மாதத்தில் நேற்று வரை, மிகக்குறைவான எண்ணிக்கையிலேயே டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. நடவடிக்கைஅதாவது, கடந்த மாதம், 219 பேர் டெங்கு காய்ச்சலுக்கு ஆளான நிலையில், சென்னையில் நேற்று வரை, 16 பேர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு காய்ச்சல் குறைந்ததற்கு, தேங்கிய மழை நீர் வெளியேற்றப்பட்டதே காரணமாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில், சென்னையில் தற்போது விட்டு விட்டு கனமழை பெய்வதால், ஆங்காங்கே மழை நீர் தேங்குவது அதிகரித்து உள்ளது. குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கும் மழை நீரில், டெங்கு பரப்பும் 'ஏடிஸ்' கொசு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாநகராட்சி அறிவுறுத்திஉள்ளது. அடுத்து வரும் நாட்களில், கண்காணிப்பை தீவிரப்படுத்தாவிட்டால், பாதிப்பு அதிகரிக்கும் என, மாநகராட்சி எச்சரித்துள்ளது.எனவே, மாநகராட்சி களப்பணியாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு பணியில் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டுள்ளனர். அது தவிர, பல இடங்களில் குடிநீரின் தரம் பரிசோதிக்கப்படுகிறது. குளோரின் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.அதே போல், சிறிய அளவில் சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டாலும், பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவ முகாம்களில் சென்று சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர் நடவடிக்கைகளின் மூலம், சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். சென்னை மாநகர சுகாதார நல அலுவலர் ஜெகதீசன் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில், இந்த மாதத்தில் இதுவரை, 16 பேர் மட்டுமே, டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ்' கொசுக்கள் மற்றும் அதன் லாவாக்கள், தற்போது பெய்த கன மழை மற்றும் வெள்ளத்தால் அழிந்து போயிருக்க கூடும். அதன் பயனாக, 'ஏடிஸ்' கொசுக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே சமயம், மழை நீர் தேங்கிய பகுதிகள், வீடுகளில், ஏடிஸ் கொசுக்களின் லாவாக்கள் உற்பத்தியாக அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீர் தேங்கிய இடங்களில், கொசு மருந்து தெளிப்பு மற்றும் புகை போடப்படுகிறது. தண்ணீர் தேங்கிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு, பிளீச்சிங் பவுடர், குளோரின் மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

இவற்றை, தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்தப்பின் போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொதுமக்களும் தங்கள் வீடு, மொட்டை மாடிகளில், தேவையற்ற நிலையில் உள்ள பொருட்களை அகற்ற வேண்டும். மேலும், குளிர்சாதன பெட்டி பின்புறம், சிறிய தொட்டியில் தேங்கக்கூடிய நீரை, அடிக்கடி அகற்றி சுத்தப்படுத்த வேண்டும். அதேபோல், வீட்டு அருகாமையில், தேவையற்ற பொருட்கள் இருந்தாலும் அகற்றி, ஏடிஸ் கொசு வளராமல், மாநகராட்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

சென்னையில் தற்போது வரை டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. மழைக்கால மருத்துவ முகாம்கள் வாயிலாக, மக்களின் அனைத்து உடல்நிலை பாதிப்புகளையும் கேட்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில், டெங்கு அறிகுறிகள் தென்பட்டால், அவர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்து, உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

சென்னையின் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழை நீரால், டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக மாநகராட்சி எச்சரித்துள்ளது. டெங்கு காய்ச்சலை தடுக்கவும், தேங்கும் மழை நீரால் ஏற்படும்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை