பஞ்சாப்பில் வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபட இருந்த காலிஸ்தான் பயங்கரவாதிக்கு பாக்., ஆதரவு

தினமலர்  தினமலர்
பஞ்சாப்பில் வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபட இருந்த காலிஸ்தான் பயங்கரவாதிக்கு பாக்., ஆதரவு

சுரே: பஞ்சாப்பில் வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபட இருந்த கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங்குக்கு பாக்., ஆதரவளித்ததை அடுத்து என்ஐஏ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.


பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரைச் சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜார் என்கிற நபர்மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் உதவியுடன் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த இவன் திட்டமிட்டுள்ளான்.
சமீப காலமாக இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்த வண்ணம் உள்ளன. காஷ்மீரில் முன்னதாக இரு பயங்கரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் டில்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உதவியுடன் கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் ஸ்லீப்பர் செல்கள் இயங்கி வருவதாகத் தகவல் வெளியானது.


பல ஆண்டு காலமாக திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலை தடுக்க என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனை அடுத்து பாகிஸ்தான் ஆயுத சப்ளை மற்றும் ஆதரவுடன் ஜலந்தர் நகரைச் சேர்ந்த ஹர்தீப் சிங் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக தெரியவந்தது. என்ஐஏ அதிகாரிகள் ஹர்தீப் சிங்மீது டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர, ஹர்தீப்மீது சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டம் பதியப்பட்டது.
கனடாவின் சுரே மாகாணத்தில் வசித்துவரும் ஹர்தீப், பல ஆண்டு காலமாக பாகிஸ்தானின் உதவியுடன் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டான். பஞ்சாப் மாநிலத்தில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்த கனடாவில் இருந்தபடியே இந்தியாவிலுள்ள பயங்கரவாதிகளுக்கு பல்வேறு பணப்பரிமாற்ற முறைகள் மற்றும் ஹவாலா பிரிவுகள் மூலமாக பணம் அனுப்பியுள்ளான். சீக்கிய பயங்கரவாத அமைப்பான காலிஸ்தானின் 'சீக் ஃபார் ஜஸ்டிஸ்' அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளான்.
மத்திய இந்திய அரசை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான பதிவுகள் மற்றும் வீடியோக்களை ஹர்தீப் பதிவேற்றினான். தற்போது என்ஐஏ அதிகாரிகளால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஹர்தீப் இடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சுரே: பஞ்சாப்பில் வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபட இருந்த கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங்குக்கு பாக்., ஆதரவளித்ததை அடுத்து என்ஐஏ தீவிர விசாரணை மேற்கொண்டு

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை