ஆறுமுகசாமி கமிஷனுக்கு மாற்று இடம் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தினமலர்  தினமலர்
ஆறுமுகசாமி கமிஷனுக்கு மாற்று இடம் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி :'ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு, நல்ல வசதியுடன் கூடிய மாற்று இடம் வழங்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 2016ல் அனுமதிக்கப்பட்டார்; சிகிச்சை பலனின்றி 2016, டிச., 5ல் காலமானார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக்கு தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்த மனுவை ஏற்று, ஆறுமுகசாமி கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் 2019ல் தடை விதித்தது.இந்த தடையை நீக்கக் கோரி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது விசாரணை நடந்து வருகிறது.இதற்கிடையில், ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ண முராரி அடங்கிய அமர்வு முன் நடந்து வருகிறது.

நேற்று நடந்த விசாரணையின் போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷன் பற்றி தங்களுக்கு உள்ள சந்தேகங்களை, ஒரு மனுவாக அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவை நாங்கள் பரிசீலித்து, இந்த வழக்கில் உத்தரவு
பிறப்பிப்போம். ஆறுமுகசாமி கமிஷனுக்கு உதவ, மருத்துவக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்ற அப்பல்லோ மருத்துவமனையின் ஆலோசனையை ஏற்கிறோம்.எங்களிடம் தாக்கல் செய்யும் மனுவின் பிரதியை, ஆறுமுகசாமி கமிஷனின் வழக்கறிஞரிடமும் அப்பல்லோ மருத்துவமனை வழங்க வேண்டும்.மேலும் ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை, ௨௦௦ சதுர அடி பரப்பளவு அடங்கிய அறையில் நடந்து வருவது அதிருப்தியளிக்கிறது. கமிஷனுக்கு இருக்கைகள் உட்பட நல்ல வசதியுடன் கூடிய பெரிய அறையை ௩௦ம் தேதிக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து விசாரணை 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

புதுடில்லி :'ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு, நல்ல வசதியுடன் கூடிய மாற்று இடம் வழங்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை