நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் கைதிகள் விடுதலை!

தினமலர்  தினமலர்
நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் கைதிகள் விடுதலை!

சென்னை :தமிழகத்தில் நல்லெண்ண அடிப்படையிலும், மனிதாபிமான அடிப்படையிலும், ஆயுள் தண்டனை கைதிகள் ௭௦௦ பேர் விடுதலை செய்யப்படுகின்றனர். நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து வருவோருக்கு சலுகை அளித்து, தண்டனையை குறைத்து, முன்னரே விடுதலை செய்ய, தமிழக அரசு முறைப்படி அரசாணை வெளியிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 113வது பிறந்த நாள், செப்., 15ல் கொண்டாடப்பட்டது.

அவரது பிறந்த நாளையொட்டி, நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனையை, நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து, முன்னதாகவே விடுதலை செய்ய, அரசு நடவடிக்கை எடுக்கும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என, செப்., 13ல் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

வழிமுறைகள்



அதன் அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனையை குறைத்து, விடுதலை செய்வதற்கான வழிமுறைகளை வகுத்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விபரம்:
* இந்திய அரசியலமைப்பின் 161வது பிரிவின்படி, விடுதலை செய்வதற்கான விதிமுறைகள் வெளியிடப்படுகின்றன

* இந்தாண்டு செப்., 15 நிலவரப்படி, 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்கள், குறிப்பாக நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்கள், சில கட்டுப்பாடுகளின் கீழ், முன்னதாக விடுதலை செய்யப்படலாம்

* பாலியல் பலாத்காரம், மோசடி, வழிப்பறி, கொள்ளை, பயங்கரவாத குற்றங்கள், மாநிலத்துக்கு எதிரான குற்றம், சிறையில் இருந்து தப்பிக்க முயற்சித்த குற்றம், கள்ள நோட்டு தயாரித்தல், பெண்களுக்கு எதிரான குற்றம் புரிந்தவர்கள், வரதட்சணை மரணம், பொருளாதார குற்றங்கள், கள்ளச்சந்தை, கடத்தல்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், விஷம் கலந்த சாராயம் விற்றல், வனம் தொடர்பான குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவோர், ஒன்றுக்கு மேற்பட்டவர்களை கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்றவர்கள், ஜாதி மற்றும் மத வன்முறையில் ஈடுபட்டவர்கள் போன்றோர், முன்னதாக விடுதலை செய்ய தகுதியற்றவர்கள்

* அதேபோல, ஊழல் ஒழிப்பு சட்டம், போதை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவர்கள், இதர வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள் போன்றோருக்கும், முன்னதாக விடுதலை அளிக்கக் கூடாது

* இது தவிர, 20 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்தவர்களையும், இதே கட்டுப்பாடுகளின் கீழ் முன்னரே விடுதலை செய்யலாம். அவ்வாறு விடுதலை செய்யப்படுவோரிடம், அதற்கான உறுதிமொழி பத்திரம் வாங்க வேண்டும்

* முன்னதாக விடுதலை என்பதை, ஆயுள் தண்டனை கைதிகள் உரிமையாக கருத முடியாது

* அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வருவோருக்கு மட்டும், முன்னரே விடுதலை அளிக்கப்பட வேண்டும். இந்த சலுகை நீட்டிக்கப்படக் கூடாது

* விதிமுறைகளின்படி, முன்னதாக விடுதலை அளிக்கப்படுவதை, மாநில அளவில் டி.ஜி.பி., அல்லது சிறைத்துறை தலைவர், சிறைத்துறை தலைமையிடத்து டி.ஐ.ஜி., உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு முன்னதாக, மாவட்ட அளவில் மத்திய சிறை கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவினர், ஆய்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும்

* மண்டல அளவில், மண்டல சிறைத்துறை டி.ஐ.ஜி., உள்ளிட்ட அதிகாரிகள், மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து, தகுதியானவர்கள் பட்டியலை மாநில அளவிலான குழுவுக்கு அனுப்ப வேண்டும்.
இறுதியாக, டி.ஜி.பி., அல்லது சிறைத்துறை டி.ஜி.பி., உரிய விதிகளின்படி, ஒவ்வொரு வழக்கிலும் விதிமுறைகளின்படி முடிவெடுத்து, அரசின் பரிந்துரைக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் 99 பேர்!



கோவை மத்திய சிறையில் விசாரணை, தண்டனை கைதிகள் என 1,900க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்; 40க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் உள்ளனர். தமிழக அரசின் சிறப்பு சலுகை அடிப்படையில், 99 கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். இது குறித்து கோவை மத்திய சிறை அதிகாரிகள் கூறுகையில், 'கோவை மத்திய சிறையில், ௧௦ ஆண்டு கள் தண்டனை காலம் கடந்த 132 கைதிகள் உள்ளனர். 'இவர்கள் விடுதலை செய்யப்பட்டால், இவர்களால் யாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்காது என கருதப்படும் 99 கைதிகள், விடுதலைக்கு தகுதி வாய்ந்தவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களை அரசு உத்தரவுப்படி, விடுதலை செய்வதற்கான பணி நடக்கிறது' என்றனர்.

சென்னை :தமிழகத்தில் நல்லெண்ண அடிப்படையிலும், மனிதாபிமான அடிப்படையிலும், ஆயுள் தண்டனை கைதிகள் ௭௦௦ பேர் விடுதலை செய்யப்படுகின்றனர். நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து வருவோருக்கு சலுகை

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை