உ.பி.,யில் வளர்ச்சி காலம் துவக்கம்: மோடி பெருமிதம்

தினமலர்  தினமலர்
உ.பி.,யில் வளர்ச்சி காலம் துவக்கம்: மோடி பெருமிதம்

ஜேவார் :''உத்தர பிரதேசத்தில் இருண்ட காலங்கள் மறைந்து விட்டன. இப்போது மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ., ஆட்சி நடப்பதால் வளர்ச்சி காலம் துவங்கி விட்டது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்குள்ள நொய்டா அருகே, ஜேவாரில் 1,300 ஏக்கரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நான்கு கட்டங்களாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல் கட்ட பணிகள் ௮,௯௪௨ கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன.
முதல் கட்ட பணிகள், 2024 செப்டம்பரில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின், இந்த விமான நிலையம் ஆண்டுக்கு ௧.௨ கோடி பயணியரை கையாளும் திறன் உடையதாக இருக்கும்.
ஜேவார் சர்வதேச விமான நிலைய முதல் கட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
உள்கட்டமைப்பு வசதி களில் அரசியல் என்ற பேச்சுக்கே நாங்கள் இடம் அளிப்பதில்லை. எங்களை பொறுத்தவரை உள்கட்டமைப்பு வசதி என்பது தேசிய கொள்கை.உத்தர பிரதேசத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் வரை இருந்த அரசுகள், மாநிலத்தின் வளர்ச்சியில் ஆர்வம் காட்டவில்லை; தங்கள் குடும்பத்தினரின் நலனில் தான் அக்கறை காட்டின. வாரிசு அரசியலை வளர்ப்பதில் தான் அவர்களுக்கு ஆர்வம் இருந்தது.ஆனால், உத்தர பிரதேசத்தில் அந்த இருண்ட காலங்கள் மறைந்து விட்டன; வளர்ச்சி காலம் துவங்கி விட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மத்தியிலும், மாநிலத்தில் பா.ஜ., ஆட்சி நடப்பதால், உத்தர பிரதேசத்தில் இரட்டை இன்ஜின் வேகத்தில் உள்கட்டமைப்பு வளர்ச்சி பணிகள் நடக்கின்றன.வளர்ச்சி திட்டங்கள் பாதியில் நிற்கின்றன என்ற பேச்சுக்கே இடம் அளிக்காமல், அவை குறித்த காலத்தில் நிறைவேற்றப்படுவதையும் உறுதி செய்கிறோம். உலக வரைபடத்தில் ஜேவார் இன்னும் இரண்டு ஆண்டுகளில் இடம் பெற்றுவிடும்.

இந்த விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால், டில்லி, மேற்கு உ.பி.,யைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுவர். வட மாநிலங்களின் நுழைவு வாயிலாக இந்த விமான நிலையம் இருக்கும். இதனால் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். உ.பி.,க்கு தேவையானது அனைத்தும் ௭௦ ஆண்டுக்கு பின் கிடைத்துள்ளது. தற்போது நாட்டில் அதிகம் இணைக்கப்பட்ட பகுதியாக உ.பி., திகழ்கிறது.இவ்வாறு அவர்பேசினார்.



'ஜின்னா சீடர்களின் வன்முறை தொடரலாமா'



நேற்று நடந்த நிகழ்ச்சியில், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:உத்தர பிரதேசத்தின் முகம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மாறியுள்ளது. மிகவும் பின்தங்கிய பகுதியாக இருந்த மேற்கு உ.பி., இப்போது வளர்ச்சி பாதையில் செல்கிறது. இந்த விமான நிலையம் அமைய, தங்கள் நிலத்தை வழங்கிய ௭,௦௦௦க்கும் அதிகமான விவசாயிகளுக்கு நன்றி. மேற்கு உ.பி., கரும்புக்கு பெயர் பெற்றது. ஆனால், இந்த கரும்புகளில் வன்முறை என்ற பெயரில் சில கட்சிகள் விஷத்தை தடவுகின்றன.வளர்ச்சி வேண்டுமா அல்லது ஜின்னாவின் சீடர்கள் என சொல்லிக் கொள்வதில் பெருமையடைவோரின் வன்முறை வேண்டுமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆசியாவில் பெரியவிமான நிலையம்



இந்த விழாவில், விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசியதாவது:ஆசியாவிலேயே மிகப் பெரிய விமான நிலையம் உ.பி.,யில் அமைய வேண்டும் என பிரதமர் விரும்பினார். அவரது விருப்பம் ஜேவார் சர்வதேச விமான நிலையம் வாயிலாக நிறைவேற உள்ளது.
இந்த விமான நிலையம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட பின், ஆசியாவிலேயே மிகப் பெரிய விமான நிலையமாக இருக்கும். உ.பி.,யில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் வரை நான்கு விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. இப்போது, ஒன்பது விமான நிலையங்கள் உள்ளன.
ஜேவாரையும் சேர்த்தால் ௧௦ ஆக உயரும். இவ்வாறு அவர் பேசினார்.

ஜேவார் :''உத்தர பிரதேசத்தில் இருண்ட காலங்கள் மறைந்து விட்டன. இப்போது மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ., ஆட்சி நடப்பதால் வளர்ச்சி காலம் துவங்கி விட்டது,'' என, பிரதமர் நரேந்திர மோடி

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை