'சமூக வலைதள கருத்துகளுக்கு பொறுப்புடைமை நிர்ணயம் அவசியம்'

தினமலர்  தினமலர்
சமூக வலைதள கருத்துகளுக்கு பொறுப்புடைமை நிர்ணயம் அவசியம்

புதுடில்லி :''சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு பொறுப்புடைமையை தெளிவாக நிர்ணயிக்க வேண்டும்,'' என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார்.
இணையதளங்கள் நிர்வாகம் தொடர்பான முதலாவது இந்தியா இன்டர்நெட் நிர்வாக அமைப்பின் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.



பரிந்துரை



இதில் பங்கேற்ற, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:'இன்டர்நெட்' எனப்படும் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களின் பயன்பாடு மற்றும் அதில் பதிவிடும் கருத்துகள் பல மாறுதல்களை சந்தித்துள்ளன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததில் இருந்து பல வகையிலும் வளர்ச்சி அடைந்து, மாறுதல்களை சந்தித்து உள்ளது.அதே நேரத்தில் அவற்றின் மீதான அரசின் நிர்வாக முறையும் மாற வேண்டியது அவசியமாகிறது.முன் இருந்ததைவிட பல மடங்கு அதிகமானோர் தற்போது பயன்படுத்துகின்றனர். கையில் வைத்தே பார்க்கக்கூடிய அளவுக்கு வெகுவாக மாறியுள்ளது.
இந்நிலையில் உலகிலேயே அதிக அளவில் இணையதளத்தை பயன்படுத்தும் நம் நாட்டில், இவற்றின் மீதான அரசின் நிர்வாக முறையில் மாற்றம் செய்யப்படவேயில்லை.
சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் பதிவிடப்படும் கருத்துகளை உண்மை என, இளைஞர்கள் உட்பட பலரும் நம்புகின்றனர்.

அந்த நம்பிக்கையை வீணடிக்கக் கூடாது. அந்தப் பதிவுகளின் நம்பகத்தன்மை, உண்மை தன்மையை தெரியபடுத்த வேண்டியது அவசியம்.ஆனால் இந்தப் பதிவு களுக்கு யார் பொறுப்பேற்பது. அதை நிர்ணயிப்பது தொடர்பாக இந்த அமைப்பு முடிவு எடுத்து பரிந்துரை அளிக்க வேண்டும்.தற்போது இந்த தளங்கள் அனைத்தும் வெறும் கருத்து பரிமாற்றத்துடன் முடிவடையவில்லை. இ - காமர்ஸ் எனப்படும் இணைய வர்த்தகம் அதிகரித்துள்ளதால், பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 'சைபர்' குற்றங்களில் இருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பாகவும் விரிவாக விவாதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

வழிமுறை



தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் பேசியதாவது:இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களுக்காக நாம் உருவாக்கும் நிர்வாக நடைமுறைகள் உலகுக்கு முன்னோடியாக, முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அடுத்த சில ஆண்டு களில் நம் நாட்டில் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டிவிடும்.அதை நினைவில் வைத்து வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

புதுடில்லி :''சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு பொறுப்புடைமையை தெளிவாக நிர்ணயிக்க வேண்டும்,'' என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை