பல்கேரியாவில் பேருந்து விபத்து: 45 பேர் பலி

தினகரன்  தினகரன்
பல்கேரியாவில் பேருந்து விபத்து: 45 பேர் பலி

சோபியா: பல்கேரியாவின் சோபியா நகரில் பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  நள்ளிரவு 2 மணிக்கு திடீரென பேருந்து விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சிறுவர்கள் உட்பட 45 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த இடத்தை பிரதமர் ஸ்டீபன் யானேவ் பார்வையிட்டார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். பேருந்து வடக்கு மெசிடோனியாவில் பதிவு எண்ணுடன் உள்ளது. பேருந்தில் வந்த அனைவரும் அங்கிருந்து பல்கேரியாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர்.

மூலக்கதை