காஷ்மீரில் தொடரும் வேட்டை; பாகிஸ்தான் பயங்கரவாதி பலி

தினமலர்  தினமலர்
காஷ்மீரில் தொடரும் வேட்டை; பாகிஸ்தான் பயங்கரவாதி பலி

ஜம்மு-ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில், பாக்., கைதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம், சுரன்கோட்டிற்கும், ரஜோரி மாவட்டம் தனமண்டிக்கும் இடையே, வனப் பகுதியில் பாக்., பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர். பாதுகாப்பு படையினர் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, ஜம்மு - ரஜோரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, காட்டைச் சுற்றிலும் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் வாயிலாக காட்டுப் பகுதியில் பதுங்கியுள்ள பயங்கர வாதிகளை அடையாளம் கண்டு வேட்டையாடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

லஷ்கர் - இ - தொய்பா

நேற்று பட்டா துரியன் காட்டிற்குள் முன்னேறிய பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்பிற்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த மூவர் படுகாயம் அடைந்தனர். பயங்கரவாதிகள் சுட்டதில், பாக்., கைதி ஜியா முஸ்தபா பலியானார்.

இது குறித்து, போலீஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த ஜியா முஸ்தபா என்ற லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி, மென்தர் வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவிய போது, 2003ல் கைது செய்யப்பட்டார்.

காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் முஸ்தபா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். கோட் பல்வால் சிறையில் இருந்த ஜியா முஸ்தபாவுக்கும், மென்தரில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்பு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து ஜியா முஸ்தபா, மென்தர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். பாதுகாப்பு படையினர் ஜியா முஸ்தபா உதவி யுடன் நேற்று, காட்டுக்குள் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை பிடிக்கச் சென்றனர்.

அப்போது பயங்கர வாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஜியா முஸ்தபா மற்றும் பாதுகாப்பு படையைச் சேர்ந்த மூவர் படுகாயம் அடைந்தனர். பாதுகாப்பு அரண்உடனே மூவரும் பழைய இடத்திற்கு திரும்பி விட்டனர். இதைத் தொடர்ந்து, கூடுதல் படை காட்டுக்குள் விரைந்தது. அங்கு ஜியா முஸ்தபா இறந்து கிடந்தார். அவரது உடலை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். மென்தர் காட்டைச் சுற்றிலும் பாதுகாப்பு படையினர் அரண் அமைத்து உள்ளனர்.இதையடுத்து, பயங்கரவாதிகள் காட்டுக்குள் உள்ள இயற்கை குகைகளுக்கு சென்று பதுங்கி உள்ளனர். விரைவில் அவர்கள் பிடிபடுவர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆப்பிள் வியாபாரி பலி

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், சோபியன் மாவட்டம் ஜைன்போரா கிராமத்தைச் சேர்ந்த ஷாஹித் அஜாஸ் என்ற ஆப்பிள் வியாபாரி, குண்டு பாய்ந்து பலியானார். பாதுகாப்பு படையினர் முகாமில் ஆயுதங்களை கைப்பற்ற, பயங்கரவாதிகள் முயற்சித்த போது நடந்த தாக்குதலில், ஷாஹித் அஜாஸ் இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

ஜம்மு-ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில், பாக்., கைதி சுட்டுக் கொல்லப்பட்டார்.nsimg2875296nsimgஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம்,

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை