‘போன்பே’ அறிவிப்பு மக்கள் அதிர்ச்சி

தினமலர்  தினமலர்
‘போன்பே’ அறிவிப்பு மக்கள் அதிர்ச்சி

புதுடில்லி:‘போன்பே’ நிறுவனம், யு.பி.ஐ., வாயிலாக செய்யப்படும் ‘மொபைல் ரீசார்ஜ்’ பரிவர்த்தனைக்கு, கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்நிறுவனம் 50 _ 100 ரூபாய் வரையிலான ரீசார்ஜ் பரிவர்த்தனைக்கு 1 ரூபாய் கட்டணமும்; 100 ரூபாய்க்கு மேற்பட்ட ரீசார்ஜ் பரிவர்த்தனைக்கு 2 ரூபாய் கட்டணமும் வசூலிக்க்கப்படும் என அறிவித்துள்ளது. யு.பி.ஐ., வாயிலாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்திருந்த போதும், முதன் முதலாக போன்பே கட்டணம் வசூலிக்க துவங்கி உள்ளது.

இதற்கு இந்நிறுவனம், மிக குறைவான நபர்களே மொபைல் ‘சார்ஜ்’ செய்வதற்கு தளத்தை பயன்படுத்துவதாகவும், சிறிய அளவிலான பரிசோதனை முயற்சியை மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மூலக்கதை