சீனாவில் மீண்டும் கொரோனா பரவல்: விமானங்கள் ரத்து; பள்ளிகள் மூடல்.!

தமிழ் முரசு  தமிழ் முரசு
சீனாவில் மீண்டும் கொரோனா பரவல்: விமானங்கள் ரத்து; பள்ளிகள் மூடல்.!

பீஜிங்: சீனாவில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் வாக்கில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீண்டும் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஐந்தாவது நாளாக தொற்று அதிகமான மக்களுக்கு பரவியதையடுத்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

தொற்று பரவலை தடுக்க 40 லட்சம் பேர் வசிக்கும் லான்சோ நகரில் இருந்து மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். லான்சோ நகரில் இருந்து பிற மாகாணங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜியான் மற்றும் லான்சோ இடையே 60 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிக அளவிலான பொதுமக்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், சுற்றலா தலங்களை உடனடியாக மூடவும் மாகாண அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



நிலக்கரி இறக்குமதிக்காக மங்கோலியாவில் இருந்து வந்தவர்கள் மூலம், சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து சீன நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘ஷாங்காயிலிருந்து வந்த வயதான ஜோடி, கன்சு மாகாணத்தில் சியான் மற்றும் மங்கோலியாவுக்குச் சென்றது.

அவர்கள் மீதும் மீண்டும் தொற்று பரவியுள்ளது. பெரிய அளவிலான கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. தவிர, பள்ளிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து பொழுதுபோக்கு தலங்களும் மூடப்பட்டன.

கட்டுப்படுத்தப்பட்ட வீட்டு வளாகங்களில் இருந்து மக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் மீண்டும்  கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ரஷ்யாவில்  டெல்டா வகை வைரசுகளின் உட்பிரிவு தொற்று பரவி வருவதாக நிபுணர்கள்  கூறுகின்றனர்.



.

மூலக்கதை