ஜி.எச்., வளாகத்தில் தனியார் ஆம்புலன்ஸ்: தேவையா? கண்காணிப்பாளர் உத்தரவு, காற்றில்...

தினமலர்  தினமலர்
ஜி.எச்., வளாகத்தில் தனியார் ஆம்புலன்ஸ்: தேவையா? கண்காணிப்பாளர் உத்தரவு, காற்றில்...

திருப்பூர்:அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் உத்தரவை மீறி, தனியார் ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனை வளாகத்துக்குள் நிறுத்தப்படுகிறது.திருப்பூர், தாராபுரம் ரோட்டில், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை என்பதால் எந்த நேரமும் மூன்று, 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்கும்.

உள்நோயாளியாக இருப்பவர் அல்லது விபத்தில் அடிபட்டு சிகிச்சைக்கு வந்தவர் இறந்து விட்டால் பிரேதத்தை வீட்டுக்கு எடுத்து செல்ல இரண்டு அமரர் ஊர்திகளும் நிறுத்தப்பட்டுள்ளது.குழந்தை பிறந்த தாய்மார்களை, மாற்றுத்திறனாளிகளை சிகிச்சை முடிந்த பின் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல, 104 சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளது. அரசு மருத்துவமனையில் இத்தனை வசதிகள் இருந்த போதும், தனியார் ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படுகிறது.
நோயாளியின் உறவினர், உடன்வருவோரை சந்தித்து, குறைந்த கட்டணத்தில் அழைத்து செல்வதாக கூறி செல்லும், சிலர் குறிப்பிட்ட இடத்துக்கு சென்ற பின் பணத்தை கறந்து விடுகின்றனர். அரசே இலவசமாக 108, 104 மற்றும், 155377 இலவச வாகன வசதிகளை அளித்துள்ளதை பலரும் மறுந்த விடுகின்றனர்.அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் வளாகத்துக்குள் தனியார் ஆம்புலன்ஸ் நிறுத்தகூடாது என உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், அத்துமீறி உள்ளே நிறுத்தப்படுகிறது.
போலீசார் கண்டுகொள்வதில்லை.இப்படி செய்யலாமா?
ரயிலில் அடிபட்டு இறப்போரை சில நேரங்கள் அடையாளம் காண முடிவதில்லை. யார் என்பது தெரியாமலே அடக்க செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இது போன்ற அடையாளம் தெரியாத பிரேதங்களை எடுத்து செல்ல வாடகை இல்லாமல் 'பிரீசர் பாக்ஸ்', ஆம்புலன்ஸ் வாகனங்கள் போலீசாருக்கு உதவிகரமாக உள்ளது.அதே போல், கொலை நடக்கும் இடங்களில் போலீசார் தகவல் அளித்ததும், தனியார் ஆம்புலன்ஸ் ஆஜராகி விடுகிறது. இதனை சாதகமாக்கி கொள்ளும், சில டிரைவர்கள், முடிந்தமட்டிலும் 'கறந்து' விடுகின்றனர். இவற்றையும் போலீசார் கண்டுகொள்வதில்லை.

திருப்பூர்:அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் உத்தரவை மீறி, தனியார் ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனை வளாகத்துக்குள் நிறுத்தப்படுகிறது.திருப்பூர், தாராபுரம் ரோட்டில், மாவட்ட தலைமை அரசு

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை