துவர்ப்பு சுவையால் யானையை துரத்துவது புதிய யுக்தி!ஆமணக்கு வளர்க்கும் பழங்குடியின மக்கள்

தினமலர்  தினமலர்
துவர்ப்பு சுவையால் யானையை துரத்துவது புதிய யுக்தி!ஆமணக்கு வளர்க்கும் பழங்குடியின மக்கள்

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலையில் யானைகள் வரவை தடுக்க மலையோர கிராமம், பழங்குடியின மக்கள் ஆமணக்கு செடிகளை வளர்க்கும் புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர்.கோவை புறநகர் பகுதிகளில், குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மலையோர கிராமங்களில், வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துவருகிறது.
குறிப்பாக, காட்டுயானைகள் மலையோர கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்துவதால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.யானை - மனித மோதலால் விலை மதிப்பில்லாத உயிரிழப்புகளும் ஏற்படுவது வேதனைக்குரியது. 'பேட்டரி' மின்சார வேலி, ராட்சத 'டார்ச்லைட்' கொண்டு யானைகளை விரட்டுதல் என பல்வேறு வழிகளை கையாண்டாலும், காட்டு யானைகள் வரவை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை வட்டாரத்தில் பெரும்பதி, பெருக்கைப்பதி, பெருக்கைப்பதிபுதுார், குஜ்ஜுர்பதி, மாங்குழி, பசுமணி உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் யானைகளின் வரவை தடுக்க, பல்வேறு யுக்திகளை பழங்குடியினர் மேற்கொண்டு வருகின்றனர்.ஏற்கனவே காலியான பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களில் சிறு கற்களை நிரப்பி, அதை வீட்டை சுற்றியும், வரிசையாக கட்டி தொங்கவிட்டுள்ளனர்.
யானைகள் வீடுகளுக்கு அருகே வர முயலும்போது, சிறு கற்கள் நிரப்பப்பட்ட காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் எழுப்பும் ஒலியால், யானைகள் அவ்விடத்தைவிட்டு சென்று விடுகின்றன.இதை பழங்குடியின கிராம மக்கள் மட்டுமல்லாமல், மலையோர கிராமங்களில் வசிக்கும் மக்களும், இந்த யுக்தியை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக, வீடுகளுக்கு அருகே ஆமணக்கு செடியை வளர்க்க இப்பகுதி மக்கள் துவங்கியுள்ளனர்.
இவற்றின் இலை மற்றும் காய்கள் துவர்ப்பு சுவை உடையதால், அருகே செல்வதை யானைகள் விரும்புவதில்லை. இதனால், பாலமலை வட்டாரத்தில் உள்ள மலை கிராமங்களில் வசிக்கும், பழங்குடியின கிராம மக்கள் இச்செடிகளை வளர்த்து யானை வரவை தடுக்கும் புதிய யுக்தியை கையாள துவங்கியுள்ளனர்.
நம்பிக்கை உள்ளது!
பாலமலை பழங்குடியினர் கூறுகையில்,'ஆமணக்கு செடிகள், 10 அடி உயரம் வளரும் தன்மை உடையது. பெரும்பாலான யானைகள் இச்செடிகள் இருப்பதை நுகர்வு சக்தியால் உணர்ந்து, அருகே செல்வதை விரும்பாது. ஆனால், ஒரு சில யானைகள் மரங்களின் அருகில் சென்று அதை முட்டி மோதி, கீழே தள்ளி விடுகின்றன. இது யானைகளிடம் இருந்து எங்களை பாதுகாக்க, நுாறு சதவீதமான தடுப்பு முறை என சொல்ல முடியாது. ஆனாலும், ஓரளவு தடுக்கும் என்ற நம்பிக்கையால், இதை வளர்த்து வருகிறோம்' என்றனர்.

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலையில் யானைகள் வரவை தடுக்க மலையோர கிராமம், பழங்குடியின மக்கள் ஆமணக்கு செடிகளை வளர்க்கும் புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர்.கோவை

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை