ஊத்துக்குளி தாலுகாவுக்கு கருவூலம் தேவை ! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

தினமலர்  தினமலர்
ஊத்துக்குளி தாலுகாவுக்கு கருவூலம் தேவை ! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

திருப்பூர்:ஊத்துக்குளி தாலுகா மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்காததால், மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக அதிருப்தி உருவாகியுள்ளது.கடந்த, 2014ம் ஆண்டு அவிநாசி தாலுகாவில் இருந்து பிரித்து, ஊத்துக்குளி தாலுகா தோற்றுவிக்கப்பட்டது.
தோற்று விக்கப்பட்டதும். மயானம் இருந்த இடத்தில், தாலுகா அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது. தாலுகா அலுவலக வளாகத்திலேயே, தாசில்தார் குடியிருப்பும் கட்டப்பட்டுள்ளது.ஆனால், இதுவரை, யாரும் பயன்படுத்தாமல், பாழடைந்து போயுள்ளது. ஊத்துக்குளி தாலுகா கடைசியில் உருவாக்கப்பட்டதாக இருந்தாலும், மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக, விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
திருப்பூர் நகரில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள ஊத்துக்குளி தாலுகா அலுவலகம் இருந்தும், தனித்தீவு போல தனித்து விடப்பட்டுள்ளது. எட்டு ஆண்டுகளான நிலையில், இதுநாள் வரை கருவூல வசதி இல்லை.இதனால், திருப்பூர் வடக்கு சார்நிலை கருவூலத்தின் மூலம், கருவூல பணி மேற்கொள்ளப்படுகிறது.
விவசாயிகள், பொதுமக்கள், நில ஆவணங்கள் தொடர்பாக, விண்ணப்ப கட்டணம் செலுத்த, திருப்பூர் வடக்கு தாலுகாவையும், 'திருப்பூர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா'வையும் நம்பியுள்ளனர்.அலைக்கழிப்பு...அரசு சம்பந்தப்பட்ட வேலை எனில், ஊத்துக்குளி தாலுகாவை சேர்ந்த மக்கள், திருப்பூர் வடக்கு தாலுகாவுக்கு சென்று, 'சலான்' வாங்கி சீல் வைத்து, பிறகு, அருகே உள்ள 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' வங்கிக்கு சென்று, விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, அதன் ரசீதை பெற்றுச்சென்று, ஊத்துக்குளி தாலுகாவில் கொடுக்க வேண்டும்.
இப்படி, சாதாரண 'சலான்' மூலம் பணம் செலுத்தும் ஒரு விஷயத்துக்கே ஊத்துக்குளி மக்கள் இப்படி அலைக்கழிக்கப்படுகின்றனர். இன்று, நேற்றல்ல, தாலுகா உருவாகிய நாளில் இருந்தே இதே நிலை தொடர்கிறது.இனியாவது, மாவட்ட நிர்வாகம் ஊத்துக்குளி மக்களின் கோரிக்கையை கேட்டு, கருணை காட்ட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

திருப்பூர்:ஊத்துக்குளி தாலுகா மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்காததால், மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக அதிருப்தி உருவாகியுள்ளது.கடந்த, 2014ம் ஆண்டு அவிநாசி தாலுகாவில்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை