எம்.ஆர்., விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் 'சம்மன்'

தினமலர்  தினமலர்
எம்.ஆர்., விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் சம்மன்

சென்னை :'உள்ளாட்சி தேர்தல் பணியால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை' என, கடிதம் வாயிலாக கால அவகாசம் கோரிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வரும் 25ம் தேதி ஆஜராக, லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர், அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

சாலைகளில் பதிக்கப்படும் ஒளிரும் விளக்குகள், வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்., கருவிகள் கொள்முதல் செய்ததில், பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்கள் தரப்பட்டன.இது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக, 8.62 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்தது தெரிய வந்தது. அவர் மீது, கரூரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின், ஜூலை 22ல், சென்னை மற்றும் கரூரில், விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் வீடு, அலுவலகம், குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நிறுவனங்கள் என, 26 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது, 25.26 லட்சம் ரூபாய் ரொக்கம், காப்பீட்டு முதலீடுகள், பணப் பரிவர்த்தனைக்கான ஆவணங்களை கைப்பற்றினர். சொத்து குவிப்பு தொடர்பாக, செப்., 30ல் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பினர்.
ஆனால் அவர், 'உள்ளாட்சி தேர்தல் பணிகள் காரணமாக, விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை; தேர்தல் முடியும் வரை அவகாசம் வேண்டும்' என, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்தார்.
தற்போது உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ளதால், வரும் 25ம் தேதி, சென்னை ஆலந்துாரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை தலைமை அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை :'உள்ளாட்சி தேர்தல் பணியால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை' என, கடிதம் வாயிலாக கால அவகாசம் கோரிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வரும் 25ம் தேதி ஆஜராக, லஞ்ச ஒழிப்பு

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை