துறைகள் குறித்த புகார்கள் பதிவு செய்ய புதிய வசதி?

தினமலர்  தினமலர்
துறைகள் குறித்த புகார்கள் பதிவு செய்ய புதிய வசதி?

சென்னை--பொதுமக்கள், அரசு துறைகள் தொடர்பான புகார்களை, மொபைல் போன் வாயிலாக பதிவு செய்ய, விரைவில் புதிய வசதி அறிமுகமாக உள்ளது.

தமிழகத்தில் அரசின் சேவைகளை பெறுவதில் குறைபாடு இருந்தால், அது குறித்த புகார்களை பொது மக்கள் தெரிவிக்கலாம். துறைகள் ரீதியாகவும், மாவட்ட அளவிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இப்படி தெரிவிக்கப்படும் புகார்கள், யாரால் பணி முடக்கப்படுகிறதோ; அவருக்கே செல்வதால், மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.இதில், மாவட்டங்களில் கலெக்டர் வாயிலாக மக்கள் புகார்கள் தெரிவிக்க, குறை தீர்ப்பு நாள் நடத்தப்படுகிறது.

இதில் நிவர்த்தி ஏற்படாத பிரச்னைகளை, முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல மக்கள் விரும்புகின்றனர். இதற்காக, முதல்வரின் தனிப் பிரிவில் புகார்கள் பெறப்படுகின்றன.இந்த புகார்கள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு, முதல்வரின் தனிப் பிரிவில் இருந்து அனுப்பப்படுவதால், இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் எழுகிறது.இதில், 'ஆன்லைன்' முறையில் தான் மக்கள் விரிவாக புகார் அளிக்க முடிகிறது. இப்பிரிவுக்கான தரைவழி தொலைபேசி எண் வாயிலாக சந்தேகங்கள் மட்டுமே கேட்க முடிகிறது; புகார்களை பதிவு செய்ய முடிவதில்லை.

இந்நிலையில், கடந்த ஆட்சிக் காலத்தில் புகார்களை பெற, 1100 என்ற பிரத்யேக எண் ஒதுக்கப்பட்டது. தற்போது இந்த எண் இருந்தாலும், புகார்களை பதிவு செய்ய இயலவில்லை.இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் புகார்களை மொபைல் போன் வாயிலாக, எளிதாக பதிவு செய்ய சிறப்பு வசதியை ஏற்படுத்தும் பணிகளை, தமிழக அரசு துவக்கி உள்ளது. அரசின் பல்வேறு துறைகளின் புகார் பிரிவுகளை, 'சாப்ட்வேர்' வாயிலாக ஒருங்கிணைக்கும் பணி நடந்து வருகிறது.

பொதுமக்கள் ஒரு புகாரை தெரிவித்தால், அது முதல்வரின் தனிப் பிரிவில் பதிவாகும்; அதே நேரம் சம்பந்தப்பட்ட துறையின் புகார் பிரிவிலும் பதிவாகும் வகையில் இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது. புகார் தற்போது யாரிடம் உள்ளது என்பது உள்ளிட்ட விபரங்களை, வெளிப்படையாக மக்கள் தெரிந்து கொள்ள இதில் வாய்ப்புஅளிக்கப்படும்.தகவல் தொழில்நுட்ப துறை வாயிலாக, இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஒதுக்கப்படும் தொடர்பு எண் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை--பொதுமக்கள், அரசு துறைகள் தொடர்பான புகார்களை, மொபைல் போன் வாயிலாக பதிவு செய்ய, விரைவில் புதிய வசதி அறிமுகமாக உள்ளது.nsimg2869747nsimgதமிழகத்தில் அரசின் சேவைகளை பெறுவதில் குறைபாடு

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை