இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,596 பேருக்கு கொரோனா: 19,582 பேர் டிஸ்சார்ஜ்: 166 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை..!!

தினகரன்  தினகரன்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,596 பேருக்கு கொரோனா: 19,582 பேர் டிஸ்சார்ஜ்: 166 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை..!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.52 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.40 கோடியை தாண்டியது. இன்று காலை 9.45 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 13,596 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,40,81,315ஆக உயர்ந்தது.* புதிதாக 166 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,52,290 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 19,582 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,34,39,331ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,89,694 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* இந்தியாவில் இதுவரை  97,79,47,783 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12,05,162  பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை