இந்தியாவில் குவிந்திருக்கும் வாய்ப்புகள்: முதலீட்டாளர்களுக்கு நிர்மலா அழைப்பு

தினமலர்  தினமலர்
இந்தியாவில் குவிந்திருக்கும் வாய்ப்புகள்: முதலீட்டாளர்களுக்கு நிர்மலா அழைப்பு

நியூயார்க்:''சர்வதேச உற்பத்தி துறை மீட்சி அடைந்திருப்பதாலும், இந்தியாவில் தெளிவான மற்றும் உறுதியான தலைமை அமைந்திருப்பதாலும், தொழில் முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் ஏராளமான வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

'யூனிகார்ன்'

உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா வந்துள்ளார். வாஷிங்டனில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பின் நியூயார்க் வந்தார்.முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்ற வட்டமேஜை மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இந்தியாவில், 'ஸ்டார்ட் - அப்' நிறுவனங்கள் அபரிமிதமான வளர்ச்சி அடைந்து வருகின்றன. மூலதன சந்தையின் வாயிலாக அவர்களுக்கு தேவையான முதலீடுகள் கிடைக்கின்றன.

இதில் 16 நிறுவனங்கள் இந்த ஆண்டிலேயே 7,500 கோடி ரூபாய்க்கு அதிகமான மதிப்பை தாண்டி, 'யூனிகார்ன்' என்ற அந்தஸ்தை பெறும்.கொரோனா பெருந்தொற்று போன்ற கடினமான கால கட்டத்திலும், 'டிஜிட்டல்'மயமாக்கலுக்கான சாத்தியக்கூறுகளை இந்தியா முழுமையாக பயன்படுத்தி உள்ளது.

'சப்ளை செயின்'

சர்வதேச அளவில் 'சப்ளை செயின்' எனப்படும் உற்பத்தி துவங்கி நுகர்வோரை சென்று சேரும் வரையிலான துறைகளில் மீட்சி ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் தெளிவான மற்றும் உறுதியான தலைமை அமைந்துள்ளதால் இங்கு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் 'மாஸ்டர் கார்டு' செயல் தலைவர் அஜய் பங்கா, தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் மைபாக், 'பெட்எக்ஸ் கார்ப்பரேஷன்' தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ராஜ் சுப்ரமணியம்.மேலும், ஐ.பி.எம்., தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான அரவிந்த் கிருஷ்ணா உள்ளிட்ட பல்வேறு அமெரிக்க நிறுவன தலைமை அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஏற்றத்தில் இந்திய பொருளாதாரம்!

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் உயர்நிலை கூட்டத்தில் பங்கேற்க மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன் அமெரிக்கா வந்து உள்ளார். இங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:பிரதமர் மோடி தலைமையிலான அரசு சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் என்ற தாரக மந்திரத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

அரசு செய்துள்ள பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளால், இந்தியாவில் வர்த்தக சூழல் மேம்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் அதிக முதலீடுகளைச் செய்வது மற்றும் நவீன தொழில்நுட்பம் மற்றும் திறன்களை நாம் நாட்டுக்கு கொண்டு வருவதன் வாயிலாக குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்க முடியும்.

கொரோனா பரவலுக்கு முன்பிருந்த அளவுக்கு இந்தியாவில் உள்நாட்டு நுகர்வு மற்றும் உற்பத்தி அதிகரித்துள்ளது. பொருளாதார நிலை மீண்டும் ஏற்றம் காணத் துவங்கி உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

நியூயார்க்:''சர்வதேச உற்பத்தி துறை மீட்சி அடைந்திருப்பதாலும், இந்தியாவில் தெளிவான மற்றும் உறுதியான தலைமை அமைந்திருப்பதாலும், தொழில் முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் ஏராளமான

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை