இங்கிலாந்தில் நடந்த எம்பி படுகொலையில் தீவிரவாதிகள் தொடர்பு

தினகரன்  தினகரன்
இங்கிலாந்தில் நடந்த எம்பி படுகொலையில் தீவிரவாதிகள் தொடர்பு

லண்டன்: இங்கிலாந்தில் எதிர்கட்சியாக உள்ள கன்சர்வேடிவ் கட்சியின் எம்பி டேவிட் அமெஸ். நேற்று முன்தினம் சர்ச் ஒன்றில் தனது தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டுக் கொண்டிருந்த போது, கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 25 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வாலிபர் மட்டுமே இக்கொலையில் ஈடுபட்டிருப்பதாக கருதும் போலீசார், இந்த கொலைக்கான பின்னணியில் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு தொடர்பு இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக கூறியுள்ளனர்.

மூலக்கதை