பிச்சாவரத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்

தினமலர்  தினமலர்
பிச்சாவரத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் உள்ள வனக்காடுகளுக்கு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினமும் அதிகளவில் வந்து, படகு சவாரி செய்து மகிழ்ச்சியடைந்து செல்கின்றனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில், அமைந்துள்ளது பிச்சாவரம் சுற்றுலா மையம்.3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், சதுப்பு நிலக்காடுகள் நிறைந்த இந்த வனச்சுற்றுலா மையத்தில், சதுப்புநிலக்காடுகளுடன், இயற்கை சூழலுடன், மருத்துவ குணம் கொண்ட சுரபுண்ணை என்னும் மாங்குரோவ்ஸ் தாவரங்கள் நிறைந்திருப்பதால், உலக அளவில் இந்த சுற்றுலா மையம் சிறப்பு வாய்ந்தது. 20 வகையான சுரப்புண்ணை தாவரங்கள்,18 வகையான மூலிகை தாவரங்கள் உள்ளது.4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்வாய்கள், ஒரே மாதிரியாக இருப்பது வியப்பாக இருக்கும். இதனால், பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செய்து மகிழ்ச்சியடைந்து செல்கின்றனர்.கோடை காலங்களில், தினமும் ஆயிரக்கணக்கில், சுற்றுலா பயணிகள் காலை முதலே வந்து குவிந்துவிடுவார்கள். விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும்.சுற்றுலா பயணிகள் வனக்காடுகளுக்கு சென்று வர, பிச்சாவரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் இயந்திர படகுகள்,துடுப்பு படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.படகில் வனக்காடுகளை சுற்றிப்பார்க்க காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை அனுமதிக்கப்படுகின்றது. சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து வனக்காடுகளை கண்டுகளித்துமகிழ்ச்சியடைந்து செல்கின்றனர்.வனக்காடுகளுக்கு படகில் செல்ல முடியாதவர்கள், சுற்றுலா மையத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தில், சுற்றுலா பயணிகள் ஏறி, மாங்குரோவ்ஸ் தாவரங்களை அங்கு இருந்தபடியே கண்டு ரசிக்கின்றனர்.சிறுவர்கள் விளையாட பூங்கா,சிற்றுண்டி, சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பயணிக்கும் நேரத்தை கணிக்கும் வகையில், ஸ்கேனிங் வசதி, டோக்கன் சிஸ்டம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் பிச்சாவரத்திற்கு வந்து விளையாடி மகிழ்ச்சியடைந்து செல்கின்றனர்.

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் உள்ள வனக்காடுகளுக்கு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினமும் அதிகளவில் வந்து, படகு சவாரி செய்து மகிழ்ச்சியடைந்து செல்கின்றனர்.கடலுார்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை