விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குரியது: நிர்மலா சீதாராமன்

தினமலர்  தினமலர்
விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குரியது: நிர்மலா சீதாராமன்

வாஷிங்டன்: ‛‛லக்கிம்பூர் வன்முறையில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்குள்ள கல்வி நிலையத்தில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்றார். அப்போது அவரிடம் உ.பி., மாநிலம் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு நிர்மலா சீதாராமன் அளித்த பதில்: வன்முறையில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டது முற்றிலும் கண்டனத்திற்குரியது. அனைவரும் இதைத் தான் சொல்கிறோம். ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் இந்தியாவின் பிற பகுதிகளிலும் நடக்கும் போது, இதற்கு சமமாக கேள்வி எழுப்பப்பட வேண்டும். ஆனால், உ.பி.,யில் பா.ஜ., ஆட்சி நடப்பதால் பெரிதுபடுத்தப்படுகிறது என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ஒன்றும் கூறவில்லையே என்ற கேள்விக்கு நிர்மலா அளித்த பதில்: நிச்சயம் அப்படி கிடையாது. இந்த சம்பவம் குறித்து நீங்கள் கேள்வி எழுப்பியது நல்ல விஷயம். அந்த சம்பவம் முற்றிலும் கண்டிக்கத்தக்கது. நாம் அனைவரும் அதனை தான் கூறுகிறோம். ஆனால், இம்மாதிரியான சம்பவங்கள் நாட்டின் மற்ற இடங்களில் நடப்பது தான் என் கவலை.

இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கிறது. நீங்களும், அமர்த்தியா சென் உள்பட பலரும் ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது இது குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நமக்கு தேவை என்று இருக்கும்போது மட்டும் ஒரு சம்பவம் குறித்து கேள்வி எழுப்பக்கூடாது. அங்கு பா.ஜ., ஆட்சியில் இருப்பதாலேயே இந்த சம்பவம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. எனது அமைச்சரவையின் சகாவின் மகன் ஒருவர் இந்த வழக்கில் சிக்கியுள்ளார். அவர் தான் இக்குற்றத்தை செய்துள்ளார்; வேறு யாரும் செய்யவில்லை என்று கருதப்படுகிறது. இது குறித்து முழுமையான விசாரணை நடத்திய பிறகு நீதி நிலைநாட்டப்படும்.

அது எனது கட்சியையோ அல்லது பிரதமரையோ தற்காப்பதாக இல்லை. இது இந்தியாவை தற்காப்பதாக இருக்கிறது. நான் இந்தியாவிற்காக பேசுவேன். ஏழைக்காக, நீதிக்காக பேசுவேன். நான் கேலி செய்ய மாட்டேன். அதுவே மற்றவர்கள் கேலி செய்யும் போது, தற்காப்பதற்காக எழுந்து நின்று, உண்மையை அடிப்படையாக வைத்து பேசுவோம் என்று அவர்களிடம் கூறுவேன் எனக்கூறினார்.


விவசாயிகள் போராட்டம் குறித்த கேள்விக்கு, வேளாண் சட்டங்கள், பல்வேறு பார்லிமென்ட் குழுக்களினால் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு உள்ளது. பல மாநில அரசுகளால் இது விவாதிக்கப்பட்டு உள்ளது. 2014ம் ஆண்டிற்கு பிறகு பா.ஜ., ஆட்சி அமைந்த பிறகும் வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. பல ஆண்டுகளாக, இச்சட்டங்கள் குறித்து முன் வடிவங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. பல தரப்பினரிடம் இது குறித்து ஆலோசித்துள்ளோம். லோக்சபாவில், வேளாண் சட்டங்கள் குறித்து விரிவாக விவாதம் நடந்தது. வேளாண் துறை அமைச்சர் விரிவாக விளக்கம் அளித்தார். ராஜ்யசபாவில் தான் அதிக குழப்பம் ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

வாஷிங்டன்: ‛‛லக்கிம்பூர் வன்முறையில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.அரசு முறை பயணமாக அமெரிக்கா

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை