முடிந்து போன விசாரணை: ஐகோர்ட்டில் 'மாஜி' பதில்

தினமலர்  தினமலர்
முடிந்து போன விசாரணை: ஐகோர்ட்டில் மாஜி பதில்

சென்னை:'ஏற்கனவே முடிந்து போன விசாரணையை, அரசியல் மாற்றம் காரணமாக மீண்டும் விசாரிக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு, 'டெண்டர்' வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது.

அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிராக குற்றம் சாட்டி, அறப்போர் இயக்கம் மற்றும் தி.மு.க., சார்பில், இந்த வழக்குகள் தொடரப்பட்டன. விசாரித்த உயர் நீதிமன்றம், புகார் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க, ஐ.பி.எஸ்., அதிகாரி பொன்னியை நியமித்தது.பொன்னி தலைமையிலான குழு விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்தது.

அதன் அடிப்படையில், வழக்கை கைவிட அரசு முடிவு செய்தது. உயர் நீதிமன்றத்திலும் அரசின் முடிவு தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வில், விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை துவங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில், முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.,வுமான வேலுமணி தாக்கல் செய்த கூடுதல் மனு:என்னை குறி வைத்து, உள்நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஐ.பி.எஸ்., அதிகாரி பொன்னி தலைமையிலான குழு விசாரணை நடத்தி, எனக்குள்ள தொடர்பை நிரூபிக்க முகாந்திரம் இல்லை என கூறியுள்ளது.

டெண்டரில் வெற்றி பெறாதவர்கள், என் அரசியல் எதிரிகளுடன் கைகோர்த்துள்ளனர்.வழக்கின் பின்னணியில் ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். டெண்டர் வழங்கியதில், எனக்கு எந்த தொடர்பும் இல்லை.லஞ்ச ஒழிப்பு துறைக்கு, விசாரணை அறிக்கை அளிக்கப்பட்டது. அரசுக்கு, அந்த அறிக்கையின் நகல் அனுப்பப்பட்டது. அறிக்கையை ஏற்று, எனக்கு எதிரான நடவடிக்கையை அரசு கைவிட்டது.

இது குறித்து உயர் நீதிமன்றத்திலும் தலைமைச் செயலர் தாக்கல் செய்த மனு, நிலுவையில் உள்ளது.ஏற்கனவே முடிவுக்கு வந்த பிரச்னையை, மீண்டும் எழுப்ப முடியாது. ஆனால், எனக்கு எதிராக, லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.ஏற்கனவே முடிந்த விசாரணையை கருதாமல், புதிதாக விசாரணை நடத்துகிறது.அரசியல் மாற்றத்தை ஆதாயமாக எடுத்து, முடிந்து போன விசாரணையை, மீண்டும் துவங்க முடியாது.

நான் இப்போது அமைச்சர் இல்லை. விசாரணையை, உயர் நீதிமன்றம் கண்காணிக்க தேவை இல்லை.விசாரணை அறிக்கையின் நகலை, எனக்கு வழங்க வேண்டும். அந்த அறிக்கையை, லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்த வழக்கில் சேர்க்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.இவ்வழக்கு அடுத்த வாரம், தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

சென்னை:'ஏற்கனவே முடிந்து போன விசாரணையை, அரசியல் மாற்றம் காரணமாக மீண்டும் விசாரிக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பதில் மனு தாக்கல்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை