நேபாளத்தில் பஸ் விபத்து: பலி 32 ஆக உயர்வு

தினமலர்  தினமலர்
நேபாளத்தில் பஸ் விபத்து: பலி 32 ஆக உயர்வு

காத்மாண்டு: நேபாளத்தின் முகு மாவட்டத்தில் ஏற்பட்ட பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்து உள்ளது.

முகு மாவட்டத்தில் நேபால் குன்ஜ் என்ற இடத்தில் இருந்து கம்கதி என்ற இடம்நோக்கி 45 பேருடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. வழியில், பிரேக் கோளாறு காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதில், சம்பவ இடத்தில் 24 பேரும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் 4 பேரும், சிகிச்சை பலனின்றி 4 பேரும் என மொத்தம் 32 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்த நிலையில், சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.



உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முகு மாவட்டத்தில் நடந்த மோசமான விபத்துகளில் இதுவும் ஒன்று எனவும் தெரிவித்துள்ளனர்.

காத்மாண்டு: நேபாளத்தின் முகு மாவட்டத்தில் ஏற்பட்ட பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்து உள்ளது.முகு மாவட்டத்தில் நேபால் குன்ஜ் என்ற இடத்தில் இருந்து கம்கதி என்ற

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை