பாரம்பரிய உடையில் மல்லிப்பூவுடன் பார்வதி
கடந்த 2105ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அவரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது. 'உத்தம வில்லன்', 'என்கிட்ட மோதாதே', 'நிமிர்', 'மாலை நேரத்து மயக்கம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது வைபவ் நடிப்பில் உருவாகி வரும் 'ஆலம்பனா' படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி நாயர், சினிமாவில் படவாய்ப்பை பெறவே தொடர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பாரம்பரிய உடையில் மல்லிப்பூ வைத்து இருக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது.