ஆண்டு பொது கூட்டம் நிறுவனங்களுக்கு அவகாசம்

தினமலர்  தினமலர்
ஆண்டு பொது கூட்டம் நிறுவனங்களுக்கு அவகாசம்

புதுடில்லி:நிறுவனங்கள் ஆண்டு பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு, கூடுதலாக இரண்டு மாத அவகாசத்தை அரசு வழங்கி உள்ளது.

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டுக்கான ஆண்டு பொதுக் கூட்டங்களை நடத்த, நிறுவனங்களுக்கு செப்டம்பர் வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அது மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கும்படி, பெருநிறுவன விவகார அமைச்சகம், நிறுவன பதிவாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

நிறுவனங்கள் சட்டப்படி, நிதியாண்டு நிறைவுபெற்ற பின், ஆறு மாதங்களுக்குள்ளாக பெரு நிறுவனங்கள் ஆண்டு பொதுக் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை