இந்திய பயணியருக்கு கட்டுப்பாடு பிரிட்டன் அதிகாரிகள் விளக்கம்

தினமலர்  தினமலர்
இந்திய பயணியருக்கு கட்டுப்பாடு பிரிட்டன் அதிகாரிகள் விளக்கம்

லண்டன்:'அனைத்து நாடுகளின் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வழங்கும் நடைமுறை குறைந்தபட்ச அளவுகோலை பூர்த்தி செய்ய வேண்டும்' என, பிரிட்டன் அரசு தெரிவித்து உள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - ஆஸ்ட்ராஜெனகா இணைந்து தயாரித்த 'கோவிஷீல்டு' தடுப்பூசியை மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்து நம் நாட்டில் வினியோகித்து வருகிறது.இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்க பிரிட்டன் அரசு மறுத்தது.'இரண்டு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட இந்திய பயணியர் பிரிட்டன் வரும் போது தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களாகவே கருதப்படுவர்' என, சமீபத்திய பயண வழிகாட்டுதலில் பிரிட்டன் அரசு தெரிவித்தது.

அவர்களுக்கு 10 நாள் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்தது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. 'ஆனாலும் இந்தியாவில் தடுப்பூசிக்கான சான்றிதழ் வழங்கும் முறையில் சிக்கல் இருப்பதால், பிரிட்டன் வரும் இந்திய பயணியர் தடுப்பூசி போடாதவர்களாகவே தொடர்ந்து கருதப்படுவர்' என, அறிவித்தது. இது சர்வதேச பயணியர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பிரிட்டன் அரசு அதிகாரிகள் கூறியதாவது:பிரிட்டன் அரசின் தடுப்பூசி கொள்கையின்படி 'பைஸர் பயோ என்டெக், ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராஜெனகா, மாடர்னா, ஜான்சன், ஆஸ்ட்ராஜெனகா கோவிஷீல்டு, ஆஸ்ட்ராஜெனகா வாக்ஸேவ்ரியா, மாடர்னா டகேடா ஆகிய தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டாலும் பயண வழிகாட்டுதலில் அனுமதிக்கப்பட்ட 18 நாடுகளில் இந்தியா இடம் பெறவில்லை.

இந்த பட்டியல் தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்படும். பொது சுகாதாரத்தை பாதுகாப்பதோடு சர்வதேச பயணியர் வருகையை மீண்டும் துவக்கும் போது, நிலையான பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதே பிரிட்டன் அரசின் நோக்கம்.எனவே அனைத்து நாடுகளின் தடுப்பூசி சான்றிதழ் அளிக்கும் நடைமுறை, குறைந்தபட்ச அளவுகோலை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த சிக்கலை படிப்படியான அணுகுமுறை வாயிலாக களைய, இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுடன் பிரிட்டன் அரசு பேச்சு நடத்தி வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

லண்டன்:'அனைத்து நாடுகளின் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வழங்கும் நடைமுறை குறைந்தபட்ச அளவுகோலை பூர்த்தி செய்ய வேண்டும்' என, பிரிட்டன் அரசு தெரிவித்து உள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனை

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை