எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு விண்ணப்பம் பெற... சென்டாக் உயர்மட்ட குழு விரைவில் கூடுகிறது

தினமலர்  தினமலர்
எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு விண்ணப்பம் பெற... சென்டாக் உயர்மட்ட குழு விரைவில் கூடுகிறது

புதுச்சேரி : எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட 'நீட்' மதிப்பெண் அடிப்படையிலான பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் பெறுவது தொடர்பாக இவ்வாரத்தில் சென்டாக் முடிவு எடுக்க உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உள்ள மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையை ஒருங்கிணைந்த முறையில் 'சென்டாக்' நிர்வாகம் நடத்தி வருகின்றது.இந்தாண்டு, எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.அதனால், முதற்கட்டமாக, 'நீட்' மதிப்பெண் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பங்களை சென்டாக் நிர்வாகம் பெற்றது. மொத்தம் 14 ஆயிரம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்து உள்ளனர்.கொரோனா தொற்று பரவல் காரணமாக, பிளஸ் 2 வகுப்பில் 'ஆல் பாஸ்' போடப்பட்டுள்ளதால், விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்தாண்டை காட்டி லும் 2 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக விண் ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான வரைவு 'மெரிட் லிஸ்ட்' ஓரிரு தினங்களில் வெளியிடப்பட உள்ளது.வழக்கமாக, அதிக மதிப்பெண் எடுத்த பெரும் பாலான மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர விரும்புவர்.

அதனால், முதலில் எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங் முடிந்த பிறகு, நீட் மதிப்பெண் அல்லாத மற்ற படிப்புகளுக்கான கவுன்சிலிங் அடுத்தடுத்து நடக்கும்.இந்தாண்டு, நீட் தேர்வு தள்ளிப் போனதால் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் பெறுவது தொடர்பாக சென்டாக் அறிவிப்பு ஏதும் வெளியிடாமல் இருந்தது.இந்நிலையில் கடந்த 12ம் தேதி, இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான 'நீட் தேர்வு, நாடு முழுதும் நடந்து முடிந்துள்ளது.அதனால், இவ்வாரத்திலேயே, எம்.பி. பி.எஸ்., சேர்க்கைக்கான விண்ணப்பத்தை ஆன்-லைனில் பெற சென்டாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து சென்டாக் உயர்மட்ட கமிட்டி ஓரிரு தினங்களில் கூடி, விண்ணப்பம் பெறும் தேதியை முடிவு செய்ய உள்ளது.இது குறித்து சென்டாக் அதிகாரிகள் கூறும்போது, 'நீட் தேர்வு, நாடு முழுதும் நடந்து முடிந்த கையோடு, விடைத்தாள் திருத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதன் முடிவு, விரைவில் வெளியாகி விடும்.

எனவே, இவ்வாரத்திலேயே, எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான பாடப்பிரிவுகளில் சேர்க்கைக்கு ஆன்-லைனில் விண்ணப்பம் பெற முடிவு செய்துள்ளோம். இதனால் பி.டெக்., உள்ளிட்ட மற்ற கவுன்சிலிங்கை நடத்துவதில் எந்த சிக்கலும் இருக்காது' என்றனர்.புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு 3,214 மாணவர்களும், கடந்தாண்டு 3,438 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இரு ந்தனர்.இந்தாண்டு, 7,200 மாணவர்கள் நீட் தேர்வு எழுதி உள்ளனர்.

புதுச்சேரி : எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட 'நீட்' மதிப்பெண் அடிப்படையிலான பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் பெறுவது தொடர்பாக இவ்வாரத்தில் சென்டாக் முடிவு எடுக்க

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை