துார்வாராத கொரட்டூர் ஏரி: மழை நீர் வீணாவது உறுதி

தினமலர்  தினமலர்
துார்வாராத கொரட்டூர் ஏரி: மழை நீர் வீணாவது உறுதி

கொரட்டூர் : இந்தாண்டும் துார் வாரப்படாததால், கழிவு நீர் குட்டையான கொரட்டூர் ஏரிக்கு, பருவ மழை மூலம் கிடைக்கும் மழை நீர் வீணாகும் நிலை தொடர்கிறது.

சென்னை அம்பத்துார் அடுத்த கொரட்டூரில், 590 ஏக்கரில் கொரட்டூர் ஏரி உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், 950 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. தற்போது, தனியார் ஆக்கிரமிப்பால் 300 ஏக்கருக்கும் அதிகமாக மாயமாகி உள்ளது.சீர்கேடுகொரட்டூர், அம்பத்துார் சுற்றுவட்டாரத்தின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரி, அம்பத்துார் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகளால் பாழானது.இதனால், கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கத்தினர், ஏரியை பாதுகாக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து, ஏரிக்குள் கழிவு நீர் விடுவதை தடுக்க, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.ஆனாலும், இன்று வரை நிரந்தர தீர்வு இல்லை. பொதுப்பணி, மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரிய துறைகள் மெத்தனத்தால், இந்த ஏரிக்கான நீர்வரத்து கால்வாய்களும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படவில்லை.அம்பத்துார் சுற்றுவட்டாரத்தில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தால், ஏரியை ஒட்டிய கழிவு நீர் கால்வாய்கள் நிரம்பி, மொத்த கழிவு நீரும் ஏரிக்குள் பாயும் நிலை தான் உள்ளது.

இதனால், ஏரிக்கு கிடைக்கும் மழை நீரும் கிடைப்பதில்லை. ஏரியின் கிழக்கே மாதனாங்குப்பம் பகுதியில் உள்ள 'கலங்கல்' தடுப்பின் உயரம் மிகவும் குறைவாக இருப்பதால், மழை நீரும் வீணாகிறது.இதை பலப்படுத்தி, உயர்த்திக் கட்டி, ஏரியை துார் வார வேண்டும் என நீர்நிலை ஆர்வலர்கள் வைத்த கோரிக்கைகள் கிடப்பில் உள்ளன.வீண்மேற்கண்ட பிரச்னைகளால், ஏரி முழுமையாக நிரம்ப வழியின்றி, நிலத்தடி நீர் ஆதாரமும் குறைந்துள்ளது. தற்போது ஏரியின் மேற்கு பகுதி கழிவு நீர் குட்டையாக மாறி விட்டது.அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் மற்றும் தாவரங்களால் கொசு மற்றும் பூச்சி இனங்கள் அதிகரித்து, சுகாதார சீர்கேடு நீடிக்கிறது.

இந்த ஆண்டும் பருவ மழையால் கிடைக்கும் நீர், ஏரியில் சேமிக்க வழியின்றி வீணாகும் நிலை உள்ளது.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:நடவடிக்கைஏரிக்குள் கழிவு நீர் வராமல் தடுக்க கருக்கு டி.டி.பி., காலனி, ஒண்டி வீரன் கோவில் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பிரதான மழை நீர் வடிகால் ஆகிய மூன்று இடங்களில் ஷெட்டர் 'ரெகுலேட்டர்' அமைக்க, அரசு 2.50 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால், அதற்கான பணிகள் இதுவரை துவங்கவில்லை. எனவே, பசுமை தீர்ப்பாய உத்தரவை முழுமையாக செயல்படுத்த வேண்டும். மேலும், ஏரியை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கொரட்டூர் : இந்தாண்டும் துார் வாரப்படாததால், கழிவு நீர் குட்டையான கொரட்டூர் ஏரிக்கு, பருவ மழை மூலம் கிடைக்கும் மழை நீர் வீணாகும் நிலை தொடர்கிறது.சென்னை அம்பத்துார் அடுத்த கொரட்டூரில்,

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை