மாவட்டத்தில் 89,286 பேருக்கு தடுப்பூசி: இலக்கு கடந்து சாதனை! தொற்றை வெல்ல பொதுமக்கள் ஆர்வம்

தினமலர்  தினமலர்
மாவட்டத்தில் 89,286 பேருக்கு தடுப்பூசி: இலக்கு கடந்து சாதனை! தொற்றை வெல்ல பொதுமக்கள் ஆர்வம்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், இரண்டாவது வார மாக, நேற்று நடந்த 'மெகா' தடுப்பூசி முகாமில், 89,286 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி நடந்த 'மெகா' தடுப்பூசி முகாம் மூலம், 1.21 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தினர். நேற்று இரண்டாவது 'மெகா' தடுப்பூசி முகாம் நடந்தது.

மருத்துவ கல்லுாரி, ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், பள்ளி, சுகாதார நிலையம் என, 672 மையங்களில் முகாம்கள் நடந்தன. காலை 7:00 மணிக்கு முகாம் துவங்கிய போது நடைபயிற்சி சென்றவர்கள், விடுமுறை நாளில் கடைவீதிக்கு வந்தவர் என பலர், தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டினர். மெல்ல மெல்ல பொதுமக்கள் அதிகளவில் வரத்துவங்கினர்.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா முன்புறம் அமைக்கப்பட்டிருந்த முகாமில், வரிசையில் காத்திருந்து வடமாநில இளைஞர்கள் பலர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

தெற்கு எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த முகாமுக்கு பல்வேறு நிறுவனங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட புலம் பெயர் தொழிலாளர்கள், பெண்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பாலுாட்டும் தாய்மார்கள் எண்ணிக்கை நேற்று சற்று குறைவாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை முகாம் என்பதால், பலர் குடும்பத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

அமைச்சர் நேரில் ஆய்வு

திருப்பூரில் நடந்த முகாம்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியம், செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர்.அமைச்சர் சுப்ரமணியம் கூறுகையில், ''திருப்பூர் மாவட்டத்தில், 18 வயதை கடந்த, 20 லட்சத்து, 77 ஆயிரத்து, 955 பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியிருந்தது. நேற்று (நேற்று முன்தினம்) வரை 13 லட்சத்து, 86 ஆயிரத்து, 891 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

முதல் தவணை தடுப்பூசி, 67 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணை, 13 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த வார முகாமில், 1.06 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1.21 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது, கூடுதலாக, 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.மாநிலத்தின், 38 மாவட்டங்களில் நடந்த முகாமில் தடுப்பூசி கூடுதல் 'டோஸ்'களை செலுத்திய முதல் மாவட்டம் திருப்பூர் தான்'' என்று பாராட்டு தெரிவித்தார்.

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், இரண்டாவது வார மாக, நேற்று நடந்த 'மெகா' தடுப்பூசி முகாமில், 89,286 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி நடந்த

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை