'நேரில் ஆஜராகும்படி உத்தரவிட உறுதியான ஆதாரங்கள் தேவை': உச்ச நீதிமன்றம்

தினமலர்  தினமலர்
நேரில் ஆஜராகும்படி உத்தரவிட உறுதியான ஆதாரங்கள் தேவை: உச்ச நீதிமன்றம்

புதுடில்லி-'உறுதியான ஆதாரமின்றி யாரையும் நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது' என, உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2015ல், உ.பி.,யைச் சேர்ந்த ஒரு கார் டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கார் டிரைவரின் மனைவி, விசாரணை நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், தன் கணவரை, முதலாளி ரமேஷ் சந்திர ஸ்ரீவத்சவா நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து விட்டதாக கூறி, அவரை விசாரிக்கும்படி கோரிஇருந்தார்.விசாரணை நீதிமன்றம் ரமேஷ் சந்திர ஸ்ரீவத்சவா நேரில் ஆஜராகும்படி 'சம்மன்' அனுப்பியது. இதை எதிர்த்து ரமேஷ் சந்திர ஸ்ரீவத்சவா தாக்கல் செய்த மனுவை, அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு அளித்த தீர்ப்பு: ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்படாத நபர் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது.அதேசமயம் அந்த நபர் குற்றம் செய்ததற்கு வலுவான ஆதாரங்கள் அல்லது சாட்சிகள் இருந்தால் மட்டுமே, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த 'வாரன்ட்' பிறப்பிக்க முடியும். எந்தவொரு ஆதாரமும் இன்றி சாதாரணமாக ஒருவரை நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இது குறித்து, 2014ல் ஹர்தீப் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதை ஆராயாமல் விசாரணை நீதிமன்ற நீதிபதி, எந்தவித குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாத நிலையில், மனுதாரரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டது.

புதுடில்லி-'உறுதியான ஆதாரமின்றி யாரையும் நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது' என, உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது.nsimg2847932nsimgகடந்த 2015ல், உ.பி.,யைச் சேர்ந்த

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை