அரசியலுக்கு முழுக்கு போட்ட மாஜி பாஜ ஒன்றிய அமைச்சர் திரிணாமுல்லுக்கு திடீர் தாவல்

தினகரன்  தினகரன்
அரசியலுக்கு முழுக்கு போட்ட மாஜி பாஜ ஒன்றிய அமைச்சர் திரிணாமுல்லுக்கு திடீர் தாவல்

கொல்கத்தா: அரசியலுக்கு முழுக்கு போடுவதாக கூறிய வந்த பாஜ எம்பி.யும். ஒன்றிய முன்னாள் அமைச்சருமான பபுல் சுப்ரியா, நேற்று திடீரென திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார். மேற்கு வங்க மாநிலம், அசன்சால் மக்களவை தொகுதி பாஜ உறுப்பினர் பபுல் சுப்ரியா. இவர் பின்னணி பாடகராக இருந்து அரசியலில் நுழைந்தார். ஒன்றிய அரசில் இவர் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணையமைச்சராக இருந்தார். சமீபத்தில் மோடி செய்த அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, இவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்ட்டது. இதனால், விரக்தி அடைந்த அவர், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், நேற்று அவர் திடீரென திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார். இது குறித்து சுப்ரியா கூறுகையில், ‘‘மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சியில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேற்கு வங்க மாநில வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்பேன். திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பிறகு பாஜ அளித்த எம்பி. பதவியை வைத்திருப்பதில் அர்த்தமில்லை. அந்த பதவியை ராஜினாமா செய்வேன்,’’ என்றார்.

மூலக்கதை