ராஜ்யசபா எம்.பி., தேர்தல் என்.ஆர்.காங்., அதிரடி முடிவு

தினமலர்  தினமலர்
ராஜ்யசபா எம்.பி., தேர்தல் என்.ஆர்.காங்., அதிரடி முடிவு

புதுச்சேரி : ராஜ்ய சபா தேர்தலில், ஆளும் கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்., சார்பில் வேட்பாளரை நிறுத்த, அக்கட்சி தலைமை முடிவு செய்துள்ளது,

அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரி ராஜ்ய சபா எம்.பி., பதவிக்கான தேர்தல், வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான மனு தாக்கல், கடந்த 15ம் தேதி துவங்கி, நடைபெற்று வருகிறது.ஆளும் கட்சியான என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணியில் 16 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் மூவர், பா.ஜ.,விற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், இக்கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி.இதனால், ராஜ்ய சபா எம்.பி., பதவியை பிடித்திட இரு கட்சிகளும் மறைமுகமாக காய் நகர்த்தி வருகின்றன. என்.ஆர்.காங்., தலைமை, சட்டசபை தேர்தலில் உதவிய முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை ராஜ்ய சபா எம்.பி.,யாக்கிட முனைப்பு காட்டுகிறது.

ஆனால், பா.ஜ.,வினர், ராஜ்யசபாவில் தங்கள் கட்சியின் பலத்தை அதிகரித்திட முயற்சித்து வருகின்றனர். இதற்காக, முதல்வருக்கு நெருக்கமான, சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஐசரி கணேஷை களம் இறக்கினால், முதல்வரும் ஒப்புக் கொள்வார் என திட்டம் வகுத்து, காய் நகர்த்தி வருகின்றனர்.நேற்று முன்தினம் , பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ராஜ்ய சபா எம்.பி., பதவியை பா.ஜ.,விற்கு வழங்கிட வேண்டி மனு கொடுத்தனர்.அப்போது, துணை முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்ததால், ராஜ்ய சபா பதவியை பா.ஜ.,விற்கு வழங்கிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர், பதில் ஏதும் கூறவில்லை.பின்னர், அக்கட்சியின் முன்னோடி நிர்வாகி ஒருவர், பா.ஜ., மாநில தலைவர் மற்றும் மாநில பொறுப்பாளரை போனில் தொடர்பு கொண்டு, ராஜ்ய சபா தேர்தலில் என்.ஆர்.காங்., போட்டியிட உள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், முதல்வர் ரங்கசாமி நேற்று மதியம், திலாஸ்பேட்டையில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் நடத்திய பூஜையில், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஐசரி கணேஷ் கலந்து கொண்டார். மல்லாடி கிருஷ்ணாராவும் பங்கேற்றார்.கோவிலில் பூஜையை முடித்த முதல்வர், ஐசரி கணேஷ், மல்லாடி கிருஷ்ணாராவ் உள்ளிட்டோருக்கு பிரசாதம் வழங்கி, ஆசீர்வதித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.முதல்வரிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த, பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா நாளை புதுச்சேரி வருகை தர உள்ளார். அதில் இரு கட்சி இடையே சுமூக முடிவு ஏற்படும். 22ம் தேதி மனு தாக்கல் செய்யப்படும் என பா.ஜ.,வினர் ஆணித்தரமாக கூறுகின்றனர்.என்.ஆர்.காங்., தரப்பிலோ, தங்கள் கட்சியை சேர்ந்தவர் தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்கின்றனர்.இதனால், ராஜ்ய சபா தேர்தலில் எந்த கட்சி போட்டியிடப் போகிறது என்பது புரியாத புதிராக உள்ளது.

புதுச்சேரி : ராஜ்ய சபா தேர்தலில், ஆளும் கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்., சார்பில் வேட்பாளரை நிறுத்த, அக்கட்சி தலைமை முடிவு செய்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை