கடலுார் பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு

தினமலர்  தினமலர்
கடலுார் பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு

கடலுார் : புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று கடலுாரில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் வழிபாடு நடந்தது.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திருப்பாதிரிபுலியூர் வரதராஜபெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூமிதேவி, ஆண்டாள் சமேத வரதராஜ பெருமாள், புதுப்பாளையம் ராஜகோபல சுவாமி, தாயாருடன் சிறப்பு அலங்காரத்திலும், மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள் பெருந்தேவி தாயாருடன் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளினர்.கடலுார் அரிசிபெரியாங்குப்பம் சக்கரத்தாழ்வார் கோவிலில் ஸ்ரீவிஜயவள்ளி தாயார், ஸ்ரீசாரங்கபாணி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மூலவர் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமியும் உற்சவரும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார். பூலோகநாதர் கோவிலில் அலர்மேலுமங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.சி.என்.பாளையம் வரதராஜப்பொருமாள் கோவிலில் நேற்று காலை 10:00 மணிக்கு பெருமாள் உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின், மகா தீபாராதனை நடந்தது.வேப்பூர் அடுத்த நல்லுார் வில்வனேஸ்வரர் கோவில் மாதவ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

அதிகாலை திருமஞ்சன அபிஷேகம் செய்து, அலங்கார பூஜைகள் நடந்தது. பின்னர், தீபாராதனை நடந்தது. சுற்றுப்புற கிராம பக்தர்கள் தரிசனம் செய்தனர்.விருத்தாசலம் கம்பர் தெரு பஜனைமடத்தில் உள்ள ராதா ருக்மணி சமேத ராதாகிருஷ்ணன சுவாமி கோவிலில், நேற்று காலை கருடாழ்வார், கம்பத்து ஆழ்வார், ஆஞ்சநேயர், தும்பிக்கை ஆழ்வார், ஆண்டாள் நாச்சியார் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தெற்கு பெரியார் நகர் ராஜகோபால சுவாமி, சாத்துக்கூடல் சாலை வரதராஜ பெருமாள் கோவில்களில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

கடலுார் : புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று கடலுாரில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் வழிபாடு நடந்தது.108 திவ்ய தேசங்களில் ஒன்றான கடலுார் திருவந்திபுரம்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை